Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, December 3, 2022

Bagavath Geethai Book issue to Devotees at Sri Danvantri Arokya peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கார்த்திகை மாத ஏகாதசி  முன்னிட்டு சிறப்பு பூஜை, தைலாபிஷேகம். பகவத் கீதை புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று டிசம்பர் 3ம்தேதி சனிக்கிழமை  கார்த்திகை மாத ஏகாதசி முன்னிட்டு மூலவர் தன்வந்திரி  பெருமாளுக்கு  சிறப்பு பூஜைகளும்,  சிறப்பு தைலாபிஷேகமும் நடைபெற்றது. 

ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி  அபிஷேகம் செய்யப்படும்  நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு  ஏராளமான  பக்தர்கள் நல்லெண்ணெய் வழங்கி தைலாபிஷேகத்தில்  மூலவர் தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தனர்.

 கார்த்திகை மாத ஏகாதசி  நாளில் தான்  குருசேத்திரத்தில்  கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு  கீதையை உரைத்தார். எனவே கீதா ஜெயந்தியும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. 

கீதா ஜெயந்தியை  முன்னிட்டு பக்தர்களுக்கு  பகவத் கீதை புத்தகம்  இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சென்னையை சேர்ந்த  டாக்டர்.ரங்கராஜன் கலந்து கொண்டு,  பீடாதிபதி. டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகங்களை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  









No comments:

Post a Comment