Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, May 15, 2017

Guru Peyarchi Maha Yagam at Sri Danvantri Peedam, Walajapet...

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
  02.09.2017, சனிக்கிழமை 3.09.2017, ஞாயிற்றுக்கிழமை
 இரு தினங்கள் சிறப்பு இலட்சார்ச்சனையுடன்
 குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்

மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை’, ‘குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாத கர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், ஒன்று, மூன்று, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும்  காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி  02.09.2017 சனிக்கிழமையன்று  கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசியினரும் குரு புத்தி குரு திசை, நடைபெறும்  அன்பர்கள் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 02.09.2017  சனிக் கிழமை  மாலை 5.30  மணிமுதல் 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை இரவு 7.00 மணிவரை இலட்சார்ச்சனையுடன்  குருப்பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
 
இந்த யாகத்திலும் இலட்சார்ச்சனையிலும்  கலந்துகொள்வதற்கு ஒரு நபருக்கு/ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  குரு பகவான் யந்திரம் ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் புகைப்படம் ஹோம பிரசாதத்துடன்  வழங்கப்படும்.இலட்ச்சார்னையில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு நபருக்கு சங்கல்ப காணிக்கை ரூபாய் 200/- வீதம் செலுத்தி  கலந்து கொள்பவர்களுக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி பகவான் டாலர் மற்றும் புகைப்படம் மற்றும் ஹோம பிரசாதம் வழங்கப்படும்.

இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள்  03.09.2017 க்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழபுதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை 632513
தொலை பேசி. 04172- 230033,230274,9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFC: SBIN0000775



.

No comments:

Post a Comment