Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 20, 2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற 23.09.2016 அன்று காலை சொர்ண பைரவருக்கும் மாலை அஷ்ட பைரவர் சகித ஸ்ரீ கால பைரவருக்கும், சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில், விஷேசமான மூலிகைகள், பட்டு வஸ்த்ரங்கள், சிவப்பு நிற பழங்கள், பூக்கள், பயன்படுத்தப் பட உள்ளது. மேலும், ஸ்ரீ பைரவருக்குப் தேய்பிறை அஷ்டமியில் இலுப்பை எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் ஆகிய பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், எண்ணிய காரியங்கள் நிறைவேறும், உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம், நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும், வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். இந்த சிறப்பு ஹோமத்தில் அனைவரும் பங்கு பெற்று ஸ்ரீ பைரவரின் அருளைப் பெற வேண்டுகிறோம். இங்கு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மட்டுமே நவ பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை,வேலூர் மாவட்டம்-632513. போன்: 04172-230033
Mail id: danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment