Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, May 20, 2016

தன்வந்திரி பீடத்தில் வைகாசி விசாகத் திருவிழா மே 21ல் நடைபெறுகிறது.

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற மே 21.05.2016   சனி கிழமை பௌர்ணமி நாளில்  வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 10.30 மணி அளவில் சுப்பிரமணிய ஹோமும் பீடத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ள கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகமும் த்ரிசிதி அர்ச்சனையும் நடைபெற உள்ளது.
வைகாசி விசாகத்தின் சிறப்பு
வைகாசி விசாகம் என்பது முருகக்கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது.
இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.மேலும்புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போல வைகாசி விசாகமும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. முருகப் பெருமான் அவதரித்த தினம் என்பது மட்டுமல்லாமல் இந்த நட்சத்திரத்துக்கு மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன.
அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை சிவபெருமான் வழங்கிய நாள்,புத்தர் பெருமான் அவதரித்த நாள் (புத்த பூர்ணிமா).
வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தினம்.இப்படி பல சிறப்புகள் கொண்டது வைகாசி விசாகம்.தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம்
இந்த நன்னாளில் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்து அன்று நடைபெறும் ஹோமங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்று அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகளுக்கு பொருட்கள் அளித்து பிரார்த்தனை செய்து வர திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தைபாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும்.,ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். மேலும் சிவகுமாரனாகவும் திருமாலின் மருமகனாகவும் விளங்கும் ஞானபண்டிதன் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும்.எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்கவும், வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெற.அழைக்கின்றார் கயிலை டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்..

மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா

வாலாஜாபேட்டை.632513 போன்.04172-230033,230274

No comments:

Post a Comment