Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 18, 2016

தன்வந்திரி பீடத்தில் மாபெரும் நரசிம்மர் ஜெயந்தி மே மாதம் 20.05.2016 நடைபெறுகிறது.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியின் சிறப்பு
தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங்கள் எனப்படுகின்றன. அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில். அந்த நாளையே ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தி விழாவாக வைணவத் தலங்களில் கொண்டாடுகின்றனர்.
ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் ருண விமோட்ஷண ஹோமம்,
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற 20.05.2016 வெள்ளி கிழமை காலை 10.00 மணி அளவில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் ருண விமோட்ஷணஹோமம் நடைபெறுகிறது. மேலும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில்அமைந்துள்ளஸ்ரீகூர்மலட்சுமிநரசிம்மருக்குகுளுமைப்பொருளானசந்தனத்திலும்,செஞ்சந்தனமும்,ந்தனாதிதைலம்,பால்,தயிர்,தேன்,நெய்,பஞ்சாமிர்தம்,கரும்புசாறு,மஞ்சள், சந்தனம், நெல்லிபொடி,,பழச்சாறு அரிசி மாவு போன்ற பல அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்  மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற உள்ளது. வஸ்திரம், செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் ருண விமோட்ஷண ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் சேர்க்கப்பட உள்ளன,
,மேற்கண்டஹோமத்தில், கலந்துகொள்வதினால்ஏற்படும்பலன்கள்
.1. கடன் பிரச்சினையின் தாக்கம் குறையும்
2. எதிரிகளின் தொல்லை குறையும்
3. பகைவர்கள்அஞ்சுவர்
4 தொழில் வியாபாரம் சிறக்கும்

5.ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும்6. எதிர் மறையான எண்ணங்கள் மறையும்7 .குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் போன்ற  பல நன்மைகள் ஏற்படும்.நாளை என்பது நரசிம்மனுக்குஇல்லை,அவரிடம் வைக்கும் கோரிக்கை உடன் நிறைவேறும்.என்ற தகவலை டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment