Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, March 12, 2016

19.03.2016 தன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 19.03.2016 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சந்தான கோபால யாகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி  விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.. தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
அந்த வகையில் வருகிற 19.03.2016 சனிக்கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சந்தான கோபால யாகம்  நடைபெற உள்ளது. வெண்ணெய் பிரசாதமும் வழங்கப்படும்
.ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த யாகத்தில் கலந்து கொள்ள விரும்பும் தம்பதியர் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.
                                                                      
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 230033, செல் 9443330203

No comments:

Post a Comment