Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, June 1, 2015

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் ஜூலை 5ல் குருப்பெயர்ச்சி யாகம் 06.07.2015 முதல் 13.07.2015 வரை லட்சார்ச்சனை

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  வரும் ஜூலை 5ம் தேதி குருப்பெயர்ச்சி யாகம் நடைபெற உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி இந்த ஆண்டு வரும் ஜூலை 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சி யாகமானது வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி 06.07.2015 முதல் 13.07.2015 வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ஒருவரது ஜென்ம ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் போது நற்பலன்களை அளிப்பார். இதன்படி கடகம், மேஷம், கும்பம், தனுசு, துலாம் ராசிக்கு நற்பலன் கிடைக்கும். ஜென்ம ராசியான 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய ராசிகளில் குருபகவான் சஞ்சாரம் செய்யும்போது நற்பலன் அளிக்காது என்பது பொதுவிதி, இதன்படி சிம்மம், மிதுனம், ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு நற்பலன் அளிக்காது.

இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 06.07.2015 முதல் 13.07.2015 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. 5.07.2015 மற்றும் 14.07.2015 ஆகிய தேதிகளில் குருப்பெயர்ச்சி யாகம் நடக்கிறது. இவற்றிற்கான கட்டணம் ரூ.500 ஆகும். லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி முதற்கொண்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் நேரடியாக பங்கேற்கலாம் அப்படி நேரடியாக பங்கேற்க இயலாதவர்கள் உரிய கட்டணத் தொகையை  S.MURALIDHARAN என்ற பெயருக்கு டிடி எடுத்து, அத்துடன் உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், உங்கள் முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுதி கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் தொடர்புக்கு…
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல்9443330203


www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in


No comments:

Post a Comment