Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, April 14, 2015

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று (14.4.2015) முதல் நாள் ஜாங்கிரி ஹோமம் துவங்கியது…







வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி 14.04.2015 காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை ஜாங்கிரி கொண்டு சகலவிதமான நோய்கள் நீங்கவும், நவக்கிரக தோஷங்கள் அகலவும், எதிரிகள் தொல்லை நீங்கவும், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறவும், திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறவும், தொழில் வியாபாரம் பெருகவும், செல்வ வளம் பெறவும், மனோ தைரியம் கிடைக்கவும், சனி பெயர்ச்சியால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் வேண்டி மாபெரும் ஸ்ரீ குபேர லட்சுமி, ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகமும் நடைபெற்றது. பீடத்தில் அமைந்துள்ள 9 அடி உயரமுள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது.

இந்த யாகத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடா, சைவ ஷேத்திர பீடாதிபதி ஸ்ரீ சிவசாமி அவர்கள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியர் முனைவர் R.நந்தகோபால் I.A.S. அவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

மேலும் இந்த விழாவின் போது ‘ஸ்ரீ தன்வந்திரி பீடமும் தெய்வ தரிசனமும்’ என்ற நூலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது.

நாளை 15.4.2015 புதன் கிழமை காலை 10 மணியளவில் இரண்டாவது நாளாக ஜாங்கிரி ஹோமம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
e-Mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment