Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, February 21, 2023

பஞ்சமியை முன்னிட்டு பஞ்சமுக வாராகிக்கு மாபெரும் யாகம் அபிஷேகம் பூஜைகள் 10.02.2023

                            தன்வந்திரி பீடத்தில் பஞ்சமியை முன்னிட்டு

பஞ்சமுக வாராகிக்கு மாபெரும் யாகம் அபிஷேகம் பூஜைகள்

 

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 10.02.2023 தை வெள்ளிக்கிழமை பஞ்சமியை திதியை முன்னிட்டு காளி, சூலினி, திரிபுர பைரவி, பகுளாமுகி மற்றும் வாராகியென பஞ்சமுகங்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக வராகி அம்மனுக்கு விஷேச ஹோமம் அபிஷேக அர்ச்சனை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை சிறப்பு பூஜைகளும் வராகி தீப வழிபாடும் நடைபெறவுள்ளது.

வராஹி சிறப்பு

வராஹி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். மிகுந்த சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவதை உடனடியாக அருளுபவள். வராஹி தேவிதேவி புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும்வராஹ புராணத்திலும்ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம். வடக்கு திசைக்கு உரியவளான வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையை தருபவள்.

சப்த கன்னியர் ப்ராஹ்மிமாகேஸ்வரிவைஷ்ணவிகௌமாரிவராஹிஇந்த்ராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் வராஹி.

பஞ்சமி தாயாக விளங்கும் ம்பிகை வராஹி ஆவாள். பல்வேறு பஞ்சங்களையும்கஷ்டங்களையும் துரத்தி வாழ்வில் வரலாறு படைக்க வைப்பவள் வராஹி பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி. வராஹி மனித உடலும்வராஹ முகமும் கொண்டவள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்இவள் சிவன்,ஹரிசக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.

கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலும்ஆதரவிலும் மழைக்கு நிகரானவள் இவள். இவள் லலிதையின் படைத்தலைவியாகசேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.

எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.

வராகி வழிபாட்டின் பலன்கள்

எதிரிகள் மற்றும் துஷ்ட சக்திகளின் தொல்லைகள் நீங்கி தொழில் வியாபாரத்தில் எதிரிகளின் பாதிப்புகள் குறைந்து வெற்றியடையலாம், தீரா நோய்களிலிருந்து விடுபடலாம், வராகி அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கப் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

மேலும் தொடர்புக்கு

 

“யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்

ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை 632513

தொடர்புக்கு 9443330203

No comments:

Post a Comment