Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, August 21, 2022

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 22ம்தேதி( திங்கள்கிழமை) ஆவணி மாத தேய்பிறை ‘காமிகா’ ஏகாதசி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம் & அபிஷேகம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 22ம்தேதி ( திங்கள்கிழமை) ஆவணி மாத தேய்பிறை ‘காமிகா’ ஏகாதசி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம் & அபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் ‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு ’ டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , உலக மக்கள் நலன் கருதி வருகிற ஆவணி மாத 6ம்தேதி
( திங்கள்கிழமை) 22.8.2022 தேதி மிக சிறப்பு வாய்ந்த ‘ காமிகா’ ஏகாதசியை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு மகா ஹோமத்துடன் , நெல்லிப்பொடி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
‘காமிகா ’ என அழைக்கப்படும் ஆவணி மாத தேய்பிறை ஏகாதசியை முன்னிட்டு ஆன்ம பலம் பெருகவும், மனபயம், மரண பயம், துன்பங்கள் நீங்கி நிம்மதி அடையவும், உடல் மற்றும் மன நோய்களிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறவும் , ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறுவதற்கான தடைகள் நீங்கி ,சகல சம்பத்துடன் வாழ நடைபெறும் ஹோமத்துடன் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறுகிறது. மேற்கண்ட ஹோமத்தில் பங்கு பெற்று பலன் பெற பிரார்த்திக்கின்றோம்.
மேலும் வாஸ்து நாளை முன்னிட்டு காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரத்யேகமாக பஞ்சபூதங்கள் ,அஷ்டதிக் பாலகர்களுடன் தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு , வாஸ்து ஹோமமும் அஷ்ட திரவிய அபிஷேகமும் , சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறகிறது. பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து செங்கல் , வாஸ்து யந்திரம் ,மச்ச யந்திரம் , வில்வகாய் , திருஷ்டி தேங்காய் , திருஷ்டி பொம்மை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் விரைவில் புதிய வீடு அமையவும், மனை தோஷங்கள் அகலவும் வாஸ்து பகவானை வேண்டி , வாஸ்து தோஷ நிவர்த்தி பிரசாதத்தை பெற்று செல்லலாம் .
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment