Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, December 10, 2019

Sudarshana Jayanthi 2019 - Maha Sudarshana Homam


வாலாஜாபேட்டை சுதர்சனர் ஆலயத்தில்சுதர்சனர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 10.12.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹா சுதர்சன ஹோமத்துடன் ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில் நெய், தேன், வெண்கடுகு, நவ சமித்துகள், வஸ்திரங்கள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், மூலிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, நெல்லிப்பொடி, பன்னீர், துளசி தீர்த்தம், தேன் போன்ற பொருட்களால் நவகலச திருமஞ்சனம் நடைபெற்று விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உலக நலனுக்காகவும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், சத்ரு பயம் அகலவும், பசுக்கள் ஆரோக்யமாக இருந்து பசு விருத்தி பெறவும், வாழ்க்கையில் வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி போன்றவற்றை பெறவும், சத்ரு பயம், விரக்தி, துர் சொப்னம் போன்றவை நீங்கவும், எதிர்மறை எண்ணங்கள் விலகவும், துன்பங்களும், தோஷங்களும், சாபங்களும் விலகவும், எதிரிகள் தொல்லை அகலவும், பயம் நீங்கி வலிமை கிடைக்கவும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









No comments:

Post a Comment