Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 23, 2019

Ekadasi Homam - Amla Powder Thirumanjanam


தன்வந்திரி பீடத்தில்ஏகாதசி ஹோமமும் நெல்லிப்பொடி திருமஞ்சனமும்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 28.06.2019 வெள்ளிக்கிழமை ஏகாதசியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நீரிழிவு நோய், கண் நோய்கள், இதய நோய்கள், போன்ற சகல விதமான நோயகளும் நீங்கி ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற்று மகிழ்சியான வாழ்வு கிடைக்க மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெறுகிறது.

ஏகாதசியில் பெருமாளை வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. ஏகாதசி திதியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறும் ஏகாதசி ஹோமத்திலும், நெல்லிப்பொடி திருமஞ்சனத்திலும் பங்கேற்ப்பதின் மூலம் பகையை வெல்ல முடியும், புத்திரபாக்யம் தரும், வம்சாவளி பெருகும், ஒளிமயமான வாழ்க்கை அமையும், இல்லறம் இனிக்கும், மன உளைச்சல் அகலும், வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும், பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும், கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வெளிநாட்டில் உள்ள சொந்தங்கள் சிறப்படையும், கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கலாம், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும், விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும், திருமண யோகம் தரும், "பாபமோசனிகா"" எனப்படும் பாபத்தை போக்கும், நல்ல பேற்றினை ஏற்படுத்தும், துரோகிகள் விலகும், உடல் சோர்வு நீக்கும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும், ரத்த சோகை அகலும், வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும், உடல் ஆரோக்கியம் தரும் சௌபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும், வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும், முன்னோர்களின் ஆசியை பெற்று அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்கும், கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும், குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள், மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும், இந்திரனும் வருணனும் இணைந்து வரம் தருவார்கள், நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும், ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது, குடும்பத்துடன் ஆனந்தமாக வாழலாம், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும், மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும், நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும், போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

மேலும் பக்தர்கள் அனைவரும் இந்த ஹோம, திருமஞ்சன பூஜைகளில் பங்கேற்று இறயருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203



No comments:

Post a Comment