Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, November 3, 2018

Pavithrotsavam .........


தன்வந்திரி பீடத்தில்பவித்ரோத்ஸவம்


ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்படவேண்டிய நித்திய நைமித்திக காம்ய, கர்மங்களில் ற்படும் குறைபாடுகள் மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெற பவித்ரோத்ஸவம் என்னும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹோமத்தினால் ஆயுள், ஆரோக்யம், புகழ், ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதுடன் நவக்ரஹ, பூத, ப்ரேத, பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள் அகலும்.  நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் இந்த ஹோமம் செய்யப்பட உள்ளது. இந்த ஹோமத்தின் மூலம் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பாக்கியம் கிடைக்கும் மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கபடும் என்பது திண்ணம்.

இந்த விசேஷமான பவித்ரோத்ஸவம் ஆகமங்களில் விதித்துள்ளபடி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பாலரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேகராமர், ஸ்ரீ சத்தியநாராயணர், ஸ்ரீ கூர்மலக்ஷ்மி  நரசிம்மர், ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்கிரீவர், ஸ்ரீ சஞ்சிவீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர், ஸ்ரீ கருடாழ்வார் போன்ற இதர பரிவார மூர்த்திகளுக்கும்  “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி நாளது விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 26ந்தேதி (12.11.2018) திங்கட்கிழமை மாலை துவங்கி மாதம் 28ம் தேதி (14.11.2018) புதன்கிழமை வரை தினமும் காலை சுமார் 10.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை சுமார் 6.30 மணி முதல் 8.00 மணி வரையும் உபய வேத, கிரந்த பாரயணங்களுடன் பூர்ணாஹூதி, சாற்றுமறை, தீர்த்த ப்ரசாத வினியோகங்களுடன் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.  ஹோமத்திற்கு தேவையான நெய், ஹோமத்ரவ்யங்கள் மற்றும் பவித்திர மாலைகளுக்கு உபயம் ஆளித்து திவ்யானுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி விண்ணப்பிக்கின்றோம்.

இவ்வைபவத்தை முன்னிட்டு நடைபெறும் கோ பூஜை, வேதபாராயணம், விசேஷ திருமஞ்சனம்,  சகல தேவதா ஹோமங்கள், மஹாபூர்ணாஹூதி,  மஹா தீபாராதனை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி உற்சவர் தாயார் ரத புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்த கோடிகள் பங்கு கொண்டு பகவத்கைங்கர்யத்தில்   கலந்துக்கொண்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுக்கிரகத்துடன்  பரிவாரமூர்த்திகளின் அருள்பெறவும் யக்ஞஸ்ரீ ஸ்ரீ டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகள் பெறவும்  அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment