Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 27, 2017

தன்வந்திரி பீடத்தில் தை அமாவாசை ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 27/01/2017 வெள்ளிக் கிழமை தை அமாவாசையை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  அமாவாசை ஹோமம் நடைபெற்றது.
ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே அமாவாசைஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.


தைஅமாவாசை என்பதாலும் தை வெள்ளிக் கிழமையை முன்னிட்டும் சூலினி துர்கா ஹோமம் மஹா ப்ரத்தியங்கிரா ஹோமம் சகல தேவதா ஹோமம் நடைபெற்றது.இந்த ஹோமத்தில் 1000 கிலோ மிளகாய் வற்றல் பூசணிக்காய் கடுகு, மிளகு, உப்பு, சிவப்பு நிற புஷ்ப;ங்கள்,, சிவப்பு நிற பழங்கள்சிவப்பு வஸ்த்திரங்கள், மற்றும் வேப்பெண்ணை, யாகத்தில் சேர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து மஹா பூர்ணாஹீதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 468 சித்தர்கள், மகிஷாசுரமர்த்தினி, தன்வந்திரி பெருமாள் கால பைரவர், ராகு கேது, மற்றும் மஹா ப்ரத்தியங்கிரா தேவிக்கும் அபிஷேகமும்ஆராதனையும் நடைபெற்றது. இதில்ஆந்திரா, கர்நாடகா,மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் ஓம் சக்தி பக்தர்கள் மற்றும் உள்ளுர் பக்தர்கள் கலந்து கொண்டு ஹோமத்தை சிறப்பித்தனர்.இந்த ஹோமத்தில் பங்கு கொள்பவர்களுடைய, சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழவும் சகல தோஷங்கள் நீங்க ப்ரார்த்தனை நடைபெற்றது.







No comments:

Post a Comment