Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 30, 2016

தன்வந்திரி பீடத்தில் 29.10.2016 சனிக் கிழமை தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் மருத்துவர் கோலத்தில் பக்தர்கள் தரிசனம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஜெயந்தி என்பதாலும், தீபாவளியை முன்னிட்டும் 29.10.2016 சனிக்கிழமை இன்று ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  நவகலச திருமஞ்சனம் நடைபெற்று, மருத்துவ அலங்காரத்தில் தன்வந்திரி பெருமாள் திருக்காட்சி அருளினார். பின்னர், தன்வந்திரி சன்னதி முன் பக்தர்கள் தன்வந்திரி மஹா மந்திரம் ஜெபிக்க, நெய், சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகிய பொருட்களைக் கொண்டு உரலில் வைத்து உலக்கையால் மருத்துவர்களும், பக்தர்களும், மருந்து தயாரித்து கொடுக்க, அதை பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி லேகியமாக தயாரித்து, ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இதை தொடர்ந்து இரண்டாவது நாள் நடைபெற்ற இலவச ஆயுர்வேத முகாமில், ஆற்காடு தொழிலதிபர்  திரு. ஜெ. லக்ஷ்மணன் மற்றும் திரு. கு. சரவணன், ஆற்காடு அவர்கள், கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டனர்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment