கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Tuesday, September 29, 2015
Monday, September 28, 2015
Sunday, September 27, 2015
Monday, September 21, 2015
கோதான பலன்கள்- தன்வந்திரி பீடம்
கோ தான பலன்கள்:
தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்தால் கெடுதல் என்றும், இதற்கு அடுத்து எட்டிற்குள் வந்தால் லாபமாகவும் சொல்லப்படுகிறது. 3-லிருந்து 5-க்குள் அமைந்தால் மனத் திருப்தியையும், 1ல் முடிவது பயத்தையும் உண்டுபண்ணும். பொதுவாக நாலு கால் பிராணி வாங்குவதற்கென்றே ஜோதிடத்தில் சில விதிமுறைகள் உள்ளன.
பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் தானமாக பசுவைக் கொடுக்கலாம். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் உத்தமம். கொம்பு, கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும். பசுவை அந்தணர் தானமாக வாங்கினால் ஆறு மாத காலத்திற்கு புரோகிதத்தால் ஜீவனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விசேஷமாக காயத்ரி ஜெபத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம். தானம் தர வேண்டிய பசுவின் இரு கொம்புகளிலும் சிறிது தங்கம் சேர்த்த பூண் பூட்டப்பட வேண்டும். நான்கு கால்களிலும் வெள்ளியால் செய்த சலங்கை அணிவிக்கப்பட வேண்டும். பட்டுத்துணி அதன்மீது அணிவித்து, அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும். தானம் வாங்குபவருக்கு ஆறு மாதத்திற்கு தேவையான பொருளோ, பணமோ கொடுக்க வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) போன்றவைகளை பொருள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். பசு தானம் மட்டும், அதை பராமரிக்க சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தர வேண்டும்.
ஆலயங்களுக்கு பசு தானம் செய்தல்
ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள். பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.
கோ தான பலன்கள்இந்திரன் இருக்குமிடம் இந்திரலோகம் என்றும், பித்ருக்கள் இருக்குமிடம் பித்ருக்கள் லோகம் என்றும், விஷ்ணு பகவான் இருக்குமிடம் வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோல் கிருஷ்ண பகவான் இருக்குமிடம் கோ லோகம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.
கோ தானத்தின் வகைகள்கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக Ôஉக்ராந்தி கோ தானம்Õ என்று செய்வதுண்டு. ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு Ôவைதரணி கோ தானம்Õ என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து, தேவாரம், திருவாசகம் ஓதி, சிவபுராணம் படிக்கக் கேட்டு, பசுவை தானம் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் தானம் செய்பவர் உயர்ந்த கதி அடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதம் தானம் செய்பவர் கைலாசத்தில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை அடைவார். ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகுகிறது.
பசுவை தானம் செய்ய இயலாதவர்கள் ஆலயங்களில் உள்ள பசுவை அதன் உயிர் உள்ளவரை, அதற்கு தேவையான உணவை கொடுத்து பராமரிப்பது பசு தானம் செய்வதை விட உயர்ந்த பலனைக் கொடுக்கும். பசுவை தானம் செய்வதாக இருந்தால் ஆரோக்கியமான பசுவை தானம் செய்ய வேண்டும். பராமரிப்பதாக இருந்தால் ஆரோக்கியம் இல்லாத நோய் உள்ள பசுவானாலும் பராமரிக்கலாம். பால் வற்றிய பசுவை பராமரிக்க பொருள் உதவி செய்பவர்கள் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். CONTACT 9443330203
email- danvantripeedam@gmail.com
தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்தால் கெடுதல் என்றும், இதற்கு அடுத்து எட்டிற்குள் வந்தால் லாபமாகவும் சொல்லப்படுகிறது. 3-லிருந்து 5-க்குள் அமைந்தால் மனத் திருப்தியையும், 1ல் முடிவது பயத்தையும் உண்டுபண்ணும். பொதுவாக நாலு கால் பிராணி வாங்குவதற்கென்றே ஜோதிடத்தில் சில விதிமுறைகள் உள்ளன.
பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் தானமாக பசுவைக் கொடுக்கலாம். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் உத்தமம். கொம்பு, கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும். பசுவை அந்தணர் தானமாக வாங்கினால் ஆறு மாத காலத்திற்கு புரோகிதத்தால் ஜீவனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விசேஷமாக காயத்ரி ஜெபத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம். தானம் தர வேண்டிய பசுவின் இரு கொம்புகளிலும் சிறிது தங்கம் சேர்த்த பூண் பூட்டப்பட வேண்டும். நான்கு கால்களிலும் வெள்ளியால் செய்த சலங்கை அணிவிக்கப்பட வேண்டும். பட்டுத்துணி அதன்மீது அணிவித்து, அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும். தானம் வாங்குபவருக்கு ஆறு மாதத்திற்கு தேவையான பொருளோ, பணமோ கொடுக்க வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) போன்றவைகளை பொருள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். பசு தானம் மட்டும், அதை பராமரிக்க சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தர வேண்டும்.
ஆலயங்களுக்கு பசு தானம் செய்தல்
ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள். பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.
கோ தான பலன்கள்இந்திரன் இருக்குமிடம் இந்திரலோகம் என்றும், பித்ருக்கள் இருக்குமிடம் பித்ருக்கள் லோகம் என்றும், விஷ்ணு பகவான் இருக்குமிடம் வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோல் கிருஷ்ண பகவான் இருக்குமிடம் கோ லோகம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.
கோ தானத்தின் வகைகள்கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக Ôஉக்ராந்தி கோ தானம்Õ என்று செய்வதுண்டு. ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு Ôவைதரணி கோ தானம்Õ என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.

பசுவை தானம் செய்ய இயலாதவர்கள் ஆலயங்களில் உள்ள பசுவை அதன் உயிர் உள்ளவரை, அதற்கு தேவையான உணவை கொடுத்து பராமரிப்பது பசு தானம் செய்வதை விட உயர்ந்த பலனைக் கொடுக்கும். பசுவை தானம் செய்வதாக இருந்தால் ஆரோக்கியமான பசுவை தானம் செய்ய வேண்டும். பராமரிப்பதாக இருந்தால் ஆரோக்கியம் இல்லாத நோய் உள்ள பசுவானாலும் பராமரிக்கலாம். பால் வற்றிய பசுவை பராமரிக்க பொருள் உதவி செய்பவர்கள் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். CONTACT 9443330203
email- danvantripeedam@gmail.com
Sunday, September 20, 2015
Friday, September 18, 2015
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா 17,09,2015
வாலாஜா
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முப்பெரும்
விழா- ஸ்ரீ முரளிதர சுவாமிகள்
தலைமையில் நடைபெற்றது.
வாலாஜா
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகர் ஆலய
12 ம் ஆண்டு விழா மற்றும்
பாரத பிரதமர் நரேந்திரமேடியின் 65 வது
பிறந்த நாள் என முப்பெரும்
விழா கையிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில்
நடைபெற்றது.
வாலாஜா
அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்தரப்பினரும்
நோய் நொடியின்றி எல்லா வளமும் பெற்று
நீடூழி வாழ வேண்டி வினைதீர்க்கும்
ஸ்ரீ விநாயக பெருமானுக்கு 23 விதமான
இலைகள், மற்றும் 8 விதமான திரவியப்பொருட்களை கொண்டு
சிறப்பு ஹோமம் மற்றும் யாகத்துடன்
சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர
மோடியின் 65 வது பிறந்த நாளையொட்டி
அவர் நீடூழி வாழ்ந்து தொண்டாற்ற
வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும், ஸ்ரீ வினைதீர்க்கும் விநாயகருக்கும்
சிறப்பு ஹோமம் மற்றும் யாகம்
நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
ஸ்ரீ விநாயகப்பொருமானை அருள் வேண்டி வழிபட்டனர்.









Thursday, September 17, 2015
Monday, September 14, 2015
Sunday, September 13, 2015
Saturday, September 5, 2015
Thursday, September 3, 2015
Wednesday, September 2, 2015
Subscribe to:
Posts (Atom)