Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, October 11, 2013

வாழ்வில் அனைத்து வளங்களும் பெற வேண்டுமா? - நிகும்பல யாகத்தில் கலந்து கொள்ளுங்கள்...


நவராத்திரி மற்றும் துர்காஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் 12/10/2013 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கணபதி பூஜையும், 13.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நிகும்பல யாகமும் நடைபெற உள்ளது.

உலக மக்களின் தீய எண்ணங்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள், மரண பயங்கள், பொருளாதாரத் தடைகள், கடன் பிரச்சனை, உறவு முறையில் சங்கடங்கள், செய்வினை, பில்லி சூன்யம் போன்ற பிற பாதிப்புகள் மற்றும் நீதிமன்ற வழக்கு பிரச்சனைகள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, ஜென்மச் சனி, சனி தசை போன்றவைகளால் ஏற்படும் தோஷங்கள் அகல, ராகு திசையில், ராகு புக்தி - அதனால் ஏற்படும் தடைகள் அகல, வீடு, மனை, மக்கள் அமையவும், மழைபெய்து விவசாய பெருமக்கள் நல்ல விளைச்சல் பெறவும் இந்த மாபெரும் யாகத்தை சுமார் 500 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு, வேப்பெண்ணெய், கடுகு, நாயுறுவி, நெய், தேன் போன்ற எண்ணற்ற மூலிகைகள் கொண்டும், 100க்கும் மேற்பட்ட பழங்கள், புஷ்பங்கள், பட்டு வஸ்திரங்கள், நவ ரத்தினங்கள் மற்றும் செவ்வரளிப் பூக்கள் கொண்டும் நிகும்பல யாகம் நடைபெற உள்ளது.

கூடை, கூடையாக மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் செய்யப்பட்டாலும் யாருக்கும் சிறு கமறல் கூட ஏற்படுவதில்லை. தொடர்ந்து மூன்று முறை இந்த பிரத்யங்கரா யாகத்தில் கலந்து கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

எனவே பக்தர்கள் அனைவரும் நிகும்பல ஹோமத்திலும், அதன்பிறகு நடைபெறும் அபிஷேகத்திலும், அன்னதானத்திலும், கூட்டுப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

No comments:

Post a Comment