Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 8, 2023

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு நடைப்பெற்றது 18.09.2023

                                        ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

விநாயகர் சதுர்த்தி விழா கால சக்கர பூஜையுடன் நடைபெற்றது

 

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைஅனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞன ஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படிவிநாயகர் சதுர்த்தி  புரட்டாசி மாதம் 1ம் தேதி 18.9.2023, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு

விநாயகர் சதுர்த்தி 27 நட்சத்திரங்களுக்கு,12 ராசிகளுக்கு ,9 வக்கிரகங்களுக்கு என மொத்தம் 48  மண்டலங்களுக்கும் விருட்சங்கள் அமைத்து காலச்சக்கரம் என்ற பெயரில் அமைந்துள்ள செடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அஷ்டதிரவியங்கள் மற்றும் விளாம்பழம்,மோதகம்,அப்பம்,சக்கரைப் பொங்கல், சுண்டல் போன்ற விநாயகருக்கு பிடித்த விசேஷப்பொருட்களுடன் அருகம்பில்,கரும்பு. வெள்ளெருக்கம் வேர் மற்றும் பல வகையான அற்புத மூலிகைகளைக் கொண்டு மஹா கணபதி ஹோமமும் தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது.


தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி விநாயகரின் சிறப்புகள்

 

தன்வந்திரி பீடத்தில் மட்டுமே உலகில் வேறெங்கும் காணாத வகையில் அமர்ந்த கோலத்தில், 4 அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் இராஜ பரிபாலனம் செய்யும் வகையில் ஒரே கல்லில் வடக்கு நோக்கி தன்வந்திரி பெருமாளும். தெற்கு நோக்கி விநாயகர் பெருமாளும் அமர்ந்து பக்தர்களுக்கு கர்ம வினை நீங்கும் விதத்திலும். கர்மப்பிணி போக்கும் விதத்திலும் திரு காட்சி தருகிறார்.

 

மஹா கணபதி  ஹோம பலன்கள்


விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெற்ற  கணபதி ஹோமங்கள்  மூலம்  நட்சத்திரநவக்கிரக தோஷங்கள் மற்றும்  12 ராசிகளில் ஏற்படும் அசுப பலன்கள் 

குறைந்து சுப பலன்கள் ஏற்படும் மேலும்  கெட்ட சக்திகளை அழித்து நன்மை தரும்,  குழந்தைப்பேறு  கிடைக்கும்,  அனைத்து விதமான தடைகள்  நீங்கி விரைவில் திருமணம்தொழில்வியாபாரம்விவசாயம் , உத்தியோகம்  போன்றவைகள்  நல்ல முறையில்  அமைந்து குடும்ப

 சுபிட்சத்துடனும்மன மகிழ்ச்சியுடனும்  வாழலாம்.

ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  மஹா கணபதியின்  பரிபூரண அருளால் கர்ம வினைகள்  நீங்கி   நல்லபுத்திஞானம் கிடைக்கும்

புண்ணியம் உண்டாகும்வீட்டில் தானியம் பெருகும்நவக்கிரக தோஷங்கள் , மனக்கவலைகள் விலகும்பொன்,பொருள் சேர்க்கையும்செயல்களில் வெற்றியும் ஏற்படும்நோய்கள் குணமாகும்.   பொதுமக்கள்பக்தர்கள் இந்த ஹோமங்களில்  பங்கு பெற்று , விநாயகர் தன்வந்திரி ஆசியுடன்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியும் ஒரு சேர பெற்று சென்றனர்இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு நல்லெண்ணெய்சீயக்காய் து|ள்கதம்பப்பொடிபால்தயிர்கரும்பு சாறுபன்னீர்இளநீர்சந்தனம்மஞ்சள்விபூதிபஞ்சாமிர்தம் போன்ற 12 விதமான அபிஷேக திரவியங்களைக்காண்டு சிறப்பு அபிஷேகமும் 27 நட்சத்திரங்கள்,9 நவக்கிரகங்கள்,12ராசிகளுக்குரியவிருட்சங்களுக்கு கலச பூஜையும்சிறப்பு  ப்ரார்த்தனையும்  நடைபெற்றது.


இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்தனர்.


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 64 நாட்கள் பரத நாட்டிய திருவிழா 16,10,2023 முதல் 18,12,2023 வரை நடைபெறுகிறது

Sunday, September 17, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள் வருகிற 19.09.2023 மற்றும் 20.09.2023 நாட்களில் நடைபெறுகிறது

 ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள்

வருகிற 19.09.2023 மற்றும் 20.09.2023 நாட்களில் நடைபெறுகிறது

 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 19.09.2023 செவ்வாய் கிழமை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராஹிக்கும், 20.09.2023 புதன் கிழமை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது.

வாராஹி ஹோமத்துடன் சத்ரு சம்மார ஹோமங்கள்:

உலகில் வேறெங்கும் காணாத வகையில் 4 அடி உயரத்தில் 10 கைகளுடன் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் காளி, சூலினி, திரிபுர பைரவி, பகலாமுகி, வாராஹி என 5 முகங்களுடன் கையில் 10 பத்து ஆயுதங்களுடன் திருக்காட்சி அருளும் பஞ்ச முக வாராஹி தேவிக்கு பஞ்சமி நாளில் விசேஷ ஹோமம்

சர்ப்ப தோஷங்கள்நாக தோஷங்கள்கால சர்ப்ப தோஷங்கள், ஆண்  பெண் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும்தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறவும்தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும்செல்வம் பெருகவும்கொடிய நோய்களிலிருந்து விடுபடவும்நீண்ட ஆயுள் பெருகவும்விபத்துக்கள் வராமல் தடுக்கவும்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும்வாகன யோகங்கள் அமையவும்பஞ்சபட்சி தோஷங்கள் விலகவும்வியாபாரம் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், விசேஷமான திரவியங்களைக் கொண்டு வாராஹி ஹோமமும் அபிஷேகமும் வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் வாராஹி தீபமும் ஏற்றி சிறப்பு வழிப்பாடு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளை பெற்றுக்காள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இதனைத் தொடர்ந்து 20.09.2023 புதன்கிழமை சஷ்டியை முன்னிட்டு சத்ரு தொல்லைகள் நீங்கவும், எதிரிகள் விலகவும், இரத்த சம்பந்தமான நோய்கள் அகலவும், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் விலகவும், ரியல் எஸ்டேட் தொழில் அபிவிருத்தி பெறவும், அதிக லாபம் பெறவும் மேலும், பல்வேறு நன்மைகள் பெற ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு வேண்டி சத்ரு சம்மார ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



சண்டி யாகத்துடன் முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது 06.09.2023

 

 இராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜாப்பேட்டை, அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள  யக்ஞஸ்ரீ  கயிலை  ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் சென்ற 06.09.2023 புதன்கிழமை முதல் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை ஸ்ரீ கிருஷ்ணர் ஹோமம், ஷ்ட பைரவர் ஹோமம், மங்கள சண்டி யாகம் கிய முப்பெரும் யாகங்கள் விசேஷமான முறையில் பல்வேறு மூலிகை திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், கார இனிப்பு பலகாரங்கள், அஷ்ட திரவியங்கள் பல்வேறு அன்ன பிரசாதங்களுடன் சிறந்த வேத விற்பன்னர்களுடன் சிறப்பாக நடைப்பெற்றது.
     அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அஷ்டகால சொர்ண பைரவருக்கும் 9 அடி உயரமுள்ள கிஷாசுரமர்த்தினிக்கும் பால், தயிர், மஞ்சள், தேன், இளநீர், கரும்பு சாறு, போன்ற 9 விதமான அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைப்பெற்றதுஇதில் பல்வேறு தரப்பு மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற அன்னதானத்திலும் பங்கேற்று ஸ்வாமிகளிடம் ஆசிப்பெற்று சென்றனர்.

Thursday, September 7, 2023

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி  பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா,

 06.09.2023 வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக  நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில்கோகுலாஷ்மியை முன்னிட்டுஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கல் ஊஞ்சலில்ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள்மகா அபிஷேகஆராதனைகளுடன்ஸ்ரீ கிருஷ்ண யாகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை  நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணருக்கு வெண்ணெய் , சீடைமுறுக்குதட்டைஅப்பம்லட்டு உள்ளிட்டவற்றை வைத்து நிவேதனம் செய்துபக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல்தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டிகால பைரவருக்கு சிறப்பு பூஜைஅபிஷேகஆராதனைசிறப்பு அா்ச்சனைகள் நடைபெற உள்ளது.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஹோம பிரசாதங்களை வழங்கினார்.