Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, July 11, 2021

VARAHI NAVARATHRI @ DANVANTRI AROGYA PEEDAM

 தன்வந்திரி பீடத்தில் வராகி நவராத்திரி

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சமுக (காளி, சூலினி, வராகி, திரிபுர பைரவி, பகுளாமுகி) வராகி ஆலயத்தில் ஆனி அமாவாசை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி எனும் வராகி நவராத்திரி வைபவம் இன்று கோலாகலமாக துவங்கியது. இன்று முதல் வருகிற 19.07.2021 தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வராகியை வேண்டி அபிஷேகம், ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, விஷேச அலங்காரம், 108 நெய் தீபம் மற்றும் ஆராதனைகள் பஞ்சமியை முன்னிட்டு நடைபெறுகிறது.

இன்று காலை கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது இதில் துர்கா ஹோமம், பாலா ஹோமம், வாசவி ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம், அன்னபூரணி ஹோமம், காயத்ரி ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், ஆரோக்கிய லஷ்மி ஹோமம் மற்றும் வராகி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கருணைக்கிழங்கு, வள்ளி கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்களுடன் நாயுருவி, மஞ்சள், குங்குமம், தாமரைப்பூ, தாமரை விதை, நவதானியங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் பஞ்சமுக வராகி தேவிக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து பல வண்ண மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சென்னை, கே.கே. நகர், ESI மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சௌமியா சம்பத் மற்றும் டாக்டர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாளை காலை இரண்டாவது நாள் பூஜைகள் காலை 7 மணிக்கு துவங்கப்படுகிறது.

வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று உலகத்தில் எதிரிகள் இல்லை என்பர். பஞ்சமி என்பது வாராஹியை குறிக்கும் பெயர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகத்தால் எனும் ஐந்தொழில்களில் அனுக்ரஹமே வாராஹியின் தொழில். வாராஹியை நினைத்து விரதம் இருந்தால் வளமையும், செழுமையும், வெற்றியும் மற்றும் மகிழ்ச்சியும் நம்மை வந்து சேரும்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி)

இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)

மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)

நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)

ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)

ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி - சாமுண்டா)

ஏழாம் நாள் சாகம்பரி தேவி

எட்டாம் நாள் வராஹி தேவி

ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி போற்றி பூஜைகள், ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது.

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும்.

இந்தியாவில் பஞ்சமுக வராகியாக தன்வந்திரி பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படை தளபதி ஆவாள். எந்தச் செயல் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவது மிகவும் சிறப்பு என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வெற்றி தெய்வமாகத் திகழும் வராகியை பஞ்சமி நாளில் வழிபட்டு வாழ்க்கையில் பலவிதமான பலன்களை பெற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தங்களை அன்புடன் அழைக்கிறது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மரகதேஸ்வரருக்கு வலது புறத்தில் தனி ஆலயம் அமைத்து கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த சன்னதியில் என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமண வரம் உடனே கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. பூமி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இவளிடம் வேண்டிக் கொண்டால் உடனடி நன்மை கிடைக்கிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன என்கின்றனர் வருகை புரியும் பக்தர்கள்.

வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிற அவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிற அவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படை தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும். இவளுக்கு பல நாமங்கள் உள்ளன. சேனநாதா, தண்டநாதா, வாராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை – ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி (வடிவம்), பலி தேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னி, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரியை. இந்த தேவியே பகளாமுகி என்றும் அழைப்பர்.

வாராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வாராஹி, அஷ்வாரூட வாராஹி, ஆதி வாராஹி, லகு வாராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் ஒவ்வொரு வாராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் என்று பல உடைகள், பல ஆயுதங்கள். வாராஹம் என்றால் என்ன? பன்றி தானே, வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வாராஹி தான். என்ன உதவி தெரியுமா? பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கி நுனியில் (அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி) வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை (இயற்கையை) மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வாராஹி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

வராகி கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும் (ஏர்) மற்றும் தண்டம்? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் (ஆழத்தில்) இருப்பதை எடுப்பதற்கு தானே, கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி (இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்) என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை

வராகியை நம்பிக்கையுடன் வழிபடுவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் (வாராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்), எதிரிகள் குறைவார்கள் (அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வாராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது) ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது

வாராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்

இப்படி வாராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் ஒரு விஷயம் வாராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வராகி தேவியை வராகி நவராத்திரியில் வழிபட்டு நன்மை பெற பிரார்த்திக்கின்றோம். இந்த யாகத்தில் பலவகையான கிழங்குகள், பட்டு புடவைகள், நெய், தேன், பற்படாகம், விலை உயர்ந்த மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளது. ஒன்பது நாட்களும் 9 வகையான அலங்காரம், 9 வகையான நெய்வேத்தியம், 9 வகையான புஷ்பங்கள், 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை, 108 நெய் தீபம், புஷ்பாஞ்சலி நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,

இராணிபேட்டை மாவட்டம்,

தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.

 

Saturday, July 10, 2021

ASHADA NAVARATHRI HOMAM FOR SRI VARAHI AMMAN DAY-01

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆஷாட நவராத்திரி வைபவம்
1000 கிலோ குங்குமத்தால் பஞ்சமுக வாராஹிக்கு அபிஷேகம் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞனாகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி 10.07.2021, சனிக்கிழமை முதல் 18.07.2021, ஞாயிற்றுக்கிழமை வரை ஆஷாட நவராத்திரி வைபவம் வாராஹி அம்மன்  சன்னதியில் 1000 தீபங்கள் ஏற்றி 1000 தாமரை மலர்களைக் கொண்டு ஹோமங்களும், பூஜைகளும் காலை, மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது. 
இதனைத் தொடர்ந்து இன்று 10.07.2021 காலை 10.00 மணிக்கு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு ஹோமம் மற்றும் பூஜைகள் சிறப்புடன் தொடங்கியது.



                                     

மேலும் தொடர்பு கொள்ள முகவரி

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,

இராணிபேட்டை மாவட்டம்,

தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.

 

Thursday, July 1, 2021

ASHTAMI HOMAM FOR ASHTA BAIRAVAR ON 02/06/2021

 அஷ்டமியில் அளவில்லா அருளுடன் பொருள் தரும் அஷ்ட பைரவர் யாகம்

                           02.07.2021, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது



இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி 02.07.2021 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் சொர்ண கமல மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் (சொர்ணாகர்ஷண பைரவர்) யாகமும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை எட்டு திக்கு காக்கும் அஷ்ட பைரவர் யாகத்துடன் மஹா கால பைரவர் யாகம், அஷ்ட மாத்ருகா பூஜையும் நடைபெறுகிறது.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

அஷ்ட பைரவர்கள்:

ஆனி தேய்பிறை அஷ்டமி: கால பைரவரை வழிபட கண் திருஷ்டி, நோய்கள் நீங்கும் தடைகள் விலகும் மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள். அஷ்ட(எட்டு) பைரவர்கள்: திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அசிதாங்க பைரவர்:

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்:

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

சண்ட பைரவர்:

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்:

குரோதனபைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரஹ தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்:

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வாராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். புறாவை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீஷண பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்:

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சண்டி தேவி விளங்குகிறாள்.

எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு:

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும், இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

பணம் தரும் பைரவர் - சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு:

ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.

தொடர்புக்கு: 9443330203

கயிலை ஞானகுரு டாக்டர் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

தன்வந்திரி நகர்,அனந்தலை மதுரா,கீழ்புதுபேட்டை,

வாலாஜாபேட்டை


DRISHTI DURGA/SOOLINI DURGA/JAI DURGA HOMAM ON 02/06/2021

 DRISHTI DURGA/SOOLINI DURGA/JAI DURGA HOMAM                                                                     

      



With the Blessings of our beloved Guruji 'Yagnasri Kayilai Gnanaguru' Dr. Sri Muralidhara Swamigal, Founder, Sri Danvantri Arogya Peedam is organizing for DRISHTI DURGA HOMAM on THEIPIRAI ASTAMI 2nd July 2021, Friday from 10.00 AM Onwards

Goddess Durga helps in clearing all the obstacles in the path of your success, negative forces or drishti are destroyed, any ailments are cured, improvement in your respective fields. Performing this homam helps in getting rid of all the business-related problems and makes the person have a happy and stable life. One shall be blessed with a happy life and Positivity in life.

Drishti Durga Homam will enable one to accomplish high monetary status throughout everyday life and enable one with high confidence. Hopelessness and cash related distresses can be overwhelmed by playing out this homam.

BENEFITS OF DHRISHTI DURGA HOMAM/SOOLINI DURGA/ JAI DURGA HOMAM:

Dhrishti Durga Homam causes you to bring your business, profession, and life up expelling the negative powers in your field. It eases you from obligations and mind hindrance. Drishti Durga Homam will help one attain high financial status in life and empower one with high self-esteem. This homam is performed to get rid of misery and money-related sorrows. It helps ups your business and expert way. It washes away all the effective malice energies and secures one's plant, Industry, Association. It makes peace and benevolent condition in the work environment and pairs your pay. Dhrishti Durga Homam is being led for the advantage of your office and its representatives. It stops misfortunes in business and calling and guarantees peace throughout everyday life and work environment. It evacuates a shortage of cash and guarantees money related strength. The bad effects of curses, evil eyes, doshas, and obstacles are removed from a person’s horoscope by performing this homam with total devotion.

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

93 days starting from Wednesday the 24th March 2021 to 24th June 2021 (Daily from 8.30 am to 12.30 pm)