Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, December 18, 2018

Vaikunta Ekadasi - Laksha Japa Maha Sudarsana Homam ...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற
லக்ஷ ஜப மஹா ஸுதர்சன ஹோமத்தில்மேதகு முன்னாள் ஆளுனர் V.சண்முகநாதன் பங்கேற்று
 மீண்டும் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆக வேண்டியும்,
அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் அமைய வேண்டியும், தேச பக்தர்கள் நலன் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி இன்று 18.12.2018 செவ்வாய்கிழமை காலை 5.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லக்ஷ ஜப மஹா சுதர்சன யாகம் நடைபெற்றது.

காலை 5.30 மணிக்கு சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சியுடன், கோ பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை, வேத பாராயணத்துடன் ஸ்ரீ தன்வந்திரி மூலவர் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்தார். இதனை தொடர்ந்து லக்ஷ ஜப சுதர்சன மஹா யக்ஞத்திற்கான யாகசாலை பூஜை, கலச பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் லக்ஷ ஜப மஹா சுதர்சன ஹோமத்தின் பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் மேதகு V.சண்முகநாதன் அவர்கள் பங்கேற்று பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்றும், அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் அமைந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், தேச மக்களின் ஆயுள், ஆரோக்யம் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்பாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பாரத மாதாவிற்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று தேச மக்களுக்காக பிரார்த்தனை செய்தார்.

அதனை தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ சுதர்சன சக்கிரத்தாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் RSS, BJP, VHP, மாவட்ட நிர்வாகிகள், பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசி பெற்றனர். நிறைவாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.














Sunday, December 16, 2018

Astha Bhairavar Yagam - Swarna Bhairavar Yagam ...


தன்வந்திரி பீடத்தில்அஷ்டமியை முன்னிட்டுஅஷ்பைரவர் யாகத்துடன் சொர்ண பைரவர் யாகம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியில் 10 பைரவர் யாகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 29.12.2018 சனிக்கிழமை காலையில் சொர்ணாகர்ஷண பைரவர் யாகமும், மாலையில் பீட்த்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 1. அசிதாங்க பைரவர் (அன்னம்) 2. ருரு பைரவர் (ரிஷபம்) 3. சண்ட பைரவர் (மயில்) 4. குரோதன பைரவர் (கருடன்) 5. உன்மத்த பைரவர் (குதிரை) 6. கபால பைரவர் (யானை) 7. பீஷண பைரவர் (சிம்மம்) 8. சம்ஹார பைரவர் (நாய்) போன்ற அஷ்ட பைரவர்களுக்கும் மற்றும் மஹாபைரவருக்கும் சிறப்பு யாகத்துடன் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற உள்ளது.

இந்த யாகம் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் போன்ற பல்வேறு வகையான காரணங்களுக்காக நடைபெறுகிறது. மேலும் தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது. ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை. நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் ஹோமம் ஆகும். ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்; அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும். மேலும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் ஹோமத்தின் மூலம் 1. வர வேண்டிய பணம் வந்துவிடும். 2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும். 3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும். 4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும். 5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். 6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும். 7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும். 8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும். பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள் 1. தலை குனியா வாழ்க்கை. 2. சுப மங்களம் ஊர்ஜிதம். 3. தீயவினைகள் முற்றிலும் அழிவு. 4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல். 5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல். 6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்கிடைக்கும். 7. கிரகண தோஷங்களின் பாதிப்பு விலகுதல். 8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல். 9. இறைவனை எளிதாக உணர்தல். 10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி நன்மை பெற செய்யும். இத்தகைய சிறப்பு வாய்ந்த யாகங்களில் அனைவரும் கலந்து கொண்டு அஷ்ட பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் மஹாபைரவர் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Pushpa Yagam ....


தன்வந்திரி பீடத்தில்
புஷ்பயாகம்
வருகிற 23.12.2018 ல் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் மாபெரும் புஷ்பயாகம் நடைபெற உள்ளது.

புஷ்பங்களின் மஹிமை :

பகவானை ஆராதித்து மகிழ்ச்சி அடைவதில் பல்வேறு வழிகள் உள்ளது. அதில் மிகவும் உசிதமானது புஷ்பங்களால் அராதிப்பது என்பது அனைவரும் மகிழ்ச்சியுடன் முன்னொருவர். அதன்மூலம் மன அமைதியும், மகிழ்ச்சியும், ஏற்பட்டு பல்வேறு வகையான நன்மைகளை பெறுவர். நமது வழிபாட்டில், பூஜையில் பிற பொருட்களை விட பூக்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வதும், ஆராதிப்பதும் ஆகும். இவ்வைபவத்தை பக்தர்கள் புஷ்பாஞ்சலி என்றும், புஷ்பார்ச்சனை என்றும், புஷ்ப வழிபாடு என்றும் பல்வேறு பெயர்களில் அழைத்து மகிழ்கின்றனர். இவற்றை பெரிய அளவில் பல்வேறு வகையான புஷ்பங்களை கொண்டு வழிபாடு செய்வதே புஷ்ப யாகம் ஆகும். இதனால் உடல் நலமும், மன நலமும் பெறலாம்.

சங்கு புஷ்பம், செந்தாமரை, வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, வில்வம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ்த்தாமரை.கொன்றை, மகிழம், மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருது, மருதாணி, தவனம், ரோஜா, கருந்துளசி, துளசி, மனோரஞ்சிதம், பவழமல்லி,  மரிக்கொழுந்து, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்கஅரளி செம்பருத்தி, அடுக்கு அரளி, தாழம்பூ, போன்ற 60 க்கும் மேற்பட்ட மலர்களால் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு புஷ்பயாகம் நடைபெற உள்ளது.

புஷ்ப அர்ச்சனையால் ஏற்படும் நன்மை :

தனலாபம், தொழில் முன்னேற்றம் கூடும்.நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். மன சஞ்சலம் நீக்கும். புத்திக்கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்ற வற்றைத் தரும்.சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும் வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும்.
மனநோய் போக்கும். தீராத குடும்பப் பகை தீர்ந்து விடும்; வியாபார போட்டியால் ஏற்படும் பகை உள்பட அனைத்துவிதமான பகைகளும் தீர்ந்துவிடும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. செய்த பாவங்கள் விலகும். தீராத நோய்களும் தீரும். நீண்ட காலமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற மனக் கஷ்டமும் விலகிவிடும். கடும் நோய்கள் காணாமல் போய்விடும். மனம், உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சிக்கு நிவாரணம் கிடைக்கும். ரத்தக்குழாய் அடைப்புக்கு தீர்வு கிடைக்கும். கட்டிகளுக்கும், கண்நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். யானைக்கால் வியாதிக்கும்  இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் புஷ்பாஞ்சலி, புஷ்பயாகம், புஷ்ப அர்ச்சனை என்று போற்றப்படும் புஷ்பயாகம் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறும் வைபவத்தில் கலந்துகொண்டு மனநோய், உடல் நோய் நீங்கி ஆத்ம சுத்தி ஏற்பட்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறலாம் என்கிறார் "யக்ஞஸ்ரீ" முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203



Laksha Japa Maha Sudarsana Homam .....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 18.12.2018 செவ்வாய்கிழமைவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுலக்ஷ ஜப மஹா ஸுதர்சன ஹோமம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 18.12.2018 செவ்வாய்கிழமை காலை 5.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லக்ஷ ஜப மஹா சுதர்சன யாம் நடைபெறுகிறது. மேற்கண்ட யாகம் காலை 5.30 மணிக்கு சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற உள்ளது.

ஸுதர்சன ஹோமம் பலன்கள் :

ஸுதர்சன ஹோமம் செய்யும்போது ஸுதர்சன சக்ரத்தின் தேவதை, ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீதன்வந்திரி என்று பல்வேறு தேவதைகள் பூஜிக்கப் படுகின்றனர். இதனால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.
நாம் வேண்டிக்கொள்ளும் நல்ல விஷயங்கள் நிறைவேறும், ஐஸ்வர்யம் தனம், செல்வம் அபிவிருத்தி, ஏழ்மை விலகுதல், வியாதி, ரோக நிவாரணம், மன நிம்மதி, எடுத்த கார்யத்தில் வெற்றி, வீடு நாடு நலம் பெறும், ஆபத்து நீங்கும், பசு விருத்தி பெறும், எதிரிகள் தொல்லை விளகும், கோபம் குறையும், சுக பிரசவம் ஆகும், ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.

நமது முயற்சிக்கு ஏற்படும் தடங்கல்கள் நீங்கும், தொல்லைகள் நீங்கும், எதிரிகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் விலகும். சுதர்சன சக்ரமும், அதன் தேவதையும், அதன் எஜமானன் ஸ்ரீமன்நாராயணனும்,  அபரிமிதமான் சக்தி வாய்ந்தவர்கள். இது ஒரு மிகுந்த சக்தி வாய்ந்த ஹோமம். இந்த மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் அடங்கியுள்ளன.

ஸுதர்சனத்தின் சக்தி :

இது பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் மிகச்சக்தி வாய்ந்த ஆயுதம். பல்லாயிரக்கணக்கான சூரிய ஒளியின் தேஜஸ் கொண்டது. இதன் வெளி வட்டம் கூர்மையான பற்கள் கொண்டது மிகவும் வேகமாகச் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தும். தன் வேலை முடிந்தவுடன் மீண்டும் கிளம்பிய இடத்துக்கே திரும்பி வரும் சக்தி படைத்தது. இவ்வளவு மகிமை வாய்ந்த ஸுதர்சன சக்கிரத்தை வணங்கிச் செய்யப்படும் இந்த ஹோமத்தில் முடிந்தவரை எல்லோரும் கலந்து கொண்டு எல்லா நன்மைகளையும் பெறலாம். என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Varshabhishekam ........


தன்வந்திரி பீடத்தில் இருவேறு நிகழ்ச்சிகள்.
14 ஆம் ஆண்டு 108 சுமங்கலிகள் பங்கேற்கும் 108 சுமங்கலி பூஜையுடன் குறுந்தகடு வெளியிட்டு விழா,
108 கலசங்களில் 108 மூலிகை தீர்த்த திருமஞ்சனம் மற்றும் சிறப்பு யாகங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது.


தன்வந்திரி பீடத்தில் “யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆசிகளுடன் உலக நலன் கருதியும், க்ஷேத்திர அபிவிருத்தியை முன்னிட்டு சுமங்கலி பூஜை 108 சுமங்கலிகளை கொண்டு 14.12.2018 வெள்ளிக்கிழமை 14 ஆம் ஆண்டு சுமங்கலி பூஜை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமங்கலிகளுக்கு பாத பூஜை செய்து புடவை, ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், புஷ்பம், வெற்றிலை பாக்கு, பழம், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கண் மை, வளையல், இனிப்பு, போன்ற சௌபாக்ய பொருட்கள் 108 சுமங்கலிகளுக்கு சௌபாக்ய பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் வருகிற மார்ச் மாதம் 13 முத்ல் 17 வரை நடைபெற உள்ள ஷோடஷ திருக்கல்யாணம், ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா, 15 வது ஆண்டு விழா முன்னிட்டு மஹோத்சவம் – 2019 குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. திரு. ஊட்டி ராஜசேகர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திருமதி. நிர்மலா முரளிதரன் அவர்கள் குற்று விளக்கு ஏற்றி, திரு. சாமவேதி ராமகிருஷ்ண சர்மா அவர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்த குறுந்தகடை, முதன்மை பொது மேலாளர், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட், வேலூர் தொலை தொடர்பு மாவட்டம் உயர்திரு. K. வெங்கடராமன் அவர்கள் வெளியீட சென்னை, கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர், கலைமாமணி ஏற்வாடி S.ராதாகிருஷ்ணன் அவர்கள் பெற்றுகொண்டார்.

இவ்விழாவில் திரு. T.R.வேதநாயகம், திரு. V.சச்சிதானந்தம், திரு. Dr.R. குழந்தைவேல், திரு. W.G.முரளி, திரு. W.R.மகேந்திரவர்மன், திரு. M.D.துரைவேல், திரு. A.M.உதயசங்கர், திரு. P.சதீஷ்குமார், திரு. N.T.சுரேஷ், திரு. D.குமரேசன், திரு. R.கனகராஜ், திரு. R.பிரகாஷ், திரு. சஞ்சீவிமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வாலாஜாபேட்டை சுகாதாரத் துறை திரு.ராஜசேகர் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இவ்வைபவத்தை முன்னிட்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திரிக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து ஸ்ரீ காயத்ரீ ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்பரக்ஷாம்பிகை யாகங்கள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 15.12.2018 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் 108 கலசங்களில், 108 மூலிகை தீர்த்த திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் சென்னை கொளத்தூர், ராகவாஸ்ரமம் மாதாஜி திருமதி. சுசீந்திரம் ராஜலக்ஷ்மி, .Dr.R.பிரதாப் குமார், திரு.N.அறிவுசெல்வம் I.P.S., Dr.M.ராமசுப்ரமணியம் I.P.S., திரு.A.V.பட்டாபிராமன், திருமதி. சீதா பட்டாபிராமன், திரு.P.மலைச்சாமி D.S.P., திரைப்பட இயக்குனர் திரு. ஆதிராஜன், திரு. பொன்ராஜசேகர், சென்னை தீநகர் திரு.R.பிரகாச், திரு. V.உதயகுமார், திரு. R.கனகராஜ், Dr. அனுராதா, சென்னை பத்மநாபா தியேட்டர் திரு.சுரேஷ் அவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.