Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 19, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாக சதுர்த்தி-கருட பஞ்சமி-வாராகி பஞ்சமி விழா இரண்டு நாட்கள்- மூன்று விழாக்களாக நடைபெறுகிறது.

                                                         ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

நாக சதுர்த்தி-கருட பஞ்சமி-வாராகி பஞ்சமி விழா

இரண்டு நாட்கள்- மூன்று விழாக்களாக நடைபெறுகிறது.

 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை ஆவணி 3ம் நாள் சதுர்த்தி திதி ஹஸ்தம் நட்சத்திரம் கூடிய நாக சதுர்த்தி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் ஓரே கல்லில் ஏக ரூபத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ ராகு கேதுவை வேண்டியும் 21.08.2023 திங்கள்கிழமை ஆவணி 4ம் நாள் சித்திரை நட்சத்திரம் பஞ்சமி திதியுடன் கூடிய கருட பஞ்சமி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 21 அடி உயரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவானை வேண்டி காலை 10.00 மணிமுதல் 12.00 மணிக்குள்ளாக சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் விசேஷ அபிஷேகங்களும் நடைபெறுகிறது. இதில் சர்ப்ப தோஷங்கள் நாக தோஷங்கள் கால சர்ப்ப தோஷங்கள் ஆண், பெண் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும், செல்வம் பெருகவும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், நீண்ட ஆயுள் பெருகவும், விபத்துக்கள் வராமல் தடுக்கவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் வாகன யோகங்கள் அமையவும், பஞ்சபட்சி தோஷங்கள் விலகவும் விசேஷமான திரவியங்களைக் கொண்டு மேற்கண்ட சிறப்பு ஹோமங்களும் அஷ்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும் வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் நடைபெறவுள்ளது. மேலும் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு 21.08.2023 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பஞ்சமியை முன்னிட்டு காளி, சூலினி, வாராகி, பகுளாமுகி, திரிபுர பைரவி, என ஐந்து முகங்களுடன் தஸ புஜங்களுடன் 5அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக வாராகிக்கு விசேஷ திரவியங்கள் மற்றும் கிழங்கு வகைகள் கொண்டு ஹோமமும் விசேஷ அபிஷேகமும் வாராகி தீபமும் ஏற்றி வழிபாடு நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருவருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் தொடர்புக்கு 9443330203. 

No comments:

Post a Comment