Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 13, 2020


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரருக்கு முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் சென்ற வருடம் 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ சொர்ண சனீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இப்பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவின் 
பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற சனி பகவான் ஆலயங்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் சென்று சனி பகவான் யந்திரத்தை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து வந்தார்.
ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படை மட்டுமின்றி பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியாது. சனி பகவான் ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரனாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர் இவரே. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக கோயில்களில் நவக்கிரகங்களுடன் சேர்ந்திரிப்பார். ஒரு சில பரிகாரக் கோயில்களில் தனி சன்னதிகளில் மூல மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் 13 படிகள் கொண்டு பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் தனி ஆலயம் அமைத்து கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்து வருகிறார். சனி பகவான் யந்திரத்தை சொர்ண சனீஸ்வர பகவானின் ஆதார பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால். பல்வேறு க்ஷேத்திரங்களில் உள்ள இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தன்வந்திரி க்ஷேத்திரத்தில் சொர்ண சனிஸ்வரன் அமைந்துள்ளதால் இப்பீடத்திற்கு 27 நக்ஷத்திரக்காரர்களும் வந்து பிரார்த்தனை செய்யும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பீடமாகவும் அமைந்துள்ளது.

தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இவரை வணங்குவதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, மற்றும் சனி தசை, சனி புக்தி ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்கவும், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் தீரவும், திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் பக்தர்கள் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு பலன் பெற்று வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரருக்கு நாளை 14.06.2020 ஞாயிற்றுக்கிழமை முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மகா மிருத்ஞசய ஹோமமும், சனி சாந்தி ஹோமமும், 1008 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. ஆலய அர்ச்சர்களை கொண்டு நடைபெறும் மேற்கண்ட பூஜைகளில் தமிழக அரசின் பொது ஊரடங்கு உத்திரவு முன்னிட்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203

 





Theipirai Ashtami...


வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சொர்ண பைரவர் யாகத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமி யாகத்தின் சிறப்பு :

ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் ஹோமத்தின் சிறப்பு தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வாரி வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது. இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பைரவர் யாகத்தில் பங்கேற்று இவரை வணங்குவது மிகவும் சிறப்பு  அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருசேர கிடைக்கும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். மேலும் ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை - 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
E-Mail : danvantripeedam@gmail.com, www.danvantritemple.org
Ph:04172-230033, 230274, 9443330203













Sri Gayathri Homam...


Gayathri Homam at Sri Danvantri Arogya Peedam on 12.06.2020

Sri Danvantri Peedam, Walajapet conducted Sri Gayathri  Homam on today  12.06.2020 Friday with the blessings of our beloved guruji “ Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal. Goddess  Gayathri is the mother of all the vedas. Gayathri  Devi pervades everywhere. Gayathri consists of three deities, Gayathri, Savithri, and Saraswathi. Of these, the first one is master of the sense, the second is the teacher of truth, and the third is the master of speech. Hence it is a Trinity of the senses, the mind, and speech. She is the Param Sakti, who is the sustaining Force that animates all life. She is the universal mother and the power of god manifestation. She is depicted as sitting on a lotus with the five faces . Because of this she also known as. Punchamukh. Her five faces epresenting the pancha pranas which is the five basic energy or life forms and the pancha thathwas and She has ten hands holding the various ayudas (weapons).

Gayathri Mantra is a sacred mantra comprising of praise, meditation, and prayer. At First the Divine is praised, then It is meditated upon in reverence, and finally an appeal is made to the Divine to awaken and strengthen the intellect, the discriminating faculty of man. Gayathri is a Mantra devi, the manifestation of all the beeja mantras. Similarly beeja mantras of different Gods, when recited together gives humans lot of positive energy and blessings of all the Gods. They are the vibrations, and represent the “call” of the soul. The presiding deities of the Gayathri mantra are Gayathri, Savithri and Saraswathi.

Gayathri Homam is an intensive way of chanting Gayathri mantra and initiates one to form a close bond with Goddess Gayathri Devi by creating a conscious flow of subtle energy within one’s body. This will empower various aspects of one’s personality – intelligence, beauty, speech, health, etc., which will naturally reflect in one’s actions and growth.

Gayathri Homam assists to ward off all misery, protect one from harm, bestow one with an incomparable inner strength which can only be experienced and cannot be explained, illuminate one’s intellect and gain of peace of mind. Besides, the effect of bad karma is also reduced and good karma facilitated.
It should be noted that apart from the personal benefit you gain, when one chants Gayathri, one’s family and everybody else also gain. Gayathri is the spirit behind the slogan of Sanatana Dharma “LokaSamastha Sukhino Bhomamitu” meaning let the all the people of this world be happy.

For More Details Contact:
Sri Danvantri Arogya Peedam,
Anandhalai Madhura, Kilpudupet,
Walajapet-632513, Ranipet Dt.
Ph:04172-230033, 230274, 9443330203






Sri Gayathri Homam...


தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ காயத்ரி ஹோமம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 12.06.2020 வெள்ளிக்கிழமை சப்தமி திதி முன்னிட்டு காலை மாலை இரு வேலையும் ஸ்ரீ காயத்ரி தேவி ஹோமம் நடைபெற்றது.

காயத்ரி ஹோமத்தில் கீழ்கண்ட பிரார்த்தனை:

இந்த யாகத்தில் கலைமகள் அருளையும், திருமகள் அருளையும் ஒரு சேர கிடைக்க வேண்டியும், அஷ்ட ஐஸ்வர்யங்கள் வேண்டியும், பாவங்களை போக்கி  புண்ணியங்கள் அளிக்க வேண்டியும், நீண்ட ஆயுள்,  நிகரில்லா செல்வத்துடன் புகழ் கிடைக்கவும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும்,  திறமைகேற்ற வேலை கிடைக்கவும், மனதில் மகிழ்ச்சி ஏற்படவும்  சகல காரிய வெற்றியும்,  நிலம் வீடு வாங்குவதற்கும், குடும்ப ஒற்றுமை, திருமாங்கல்யம் மழலை பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்க்கை வேண்டியும் குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, பண பிரச்சனைகள், கடன் தொல்லைகள் மற்றும் வியாபார தடைகள் நீங்கவும் சர்வ மங்கலமும், லக்ஷ்மி கடாட்சமும் உலக மக்களுக்கு கிடைக்க மேற்கண்ட காயத்ரி ஹோமத்தில் பிரார்த்தனை  செய்யப்பட்டது.

இதனை தொடார்ந்து 4அடி உயரம் உள்ள பஞ்சலோக காயத்ரிதேவிக்கும் மா மேருவிற்கும் பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கு உத்தரவு முன்னிட்டு பொது மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பதினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203







Friday, June 12, 2020

10 Bhairavar Homam at Sri Danvantri Arogya Peedam on 13.06.2020


10 Bhairavar Homam at Sri Danvantri Arogya Peedam on 13.06.2020

Ashta Bhairava Maha Yagam, Maha Bhairavar with Swarnakarshana Bhairavar Homam  at Sri Danvantri Arogya Peedam on June 13th Saturday 2020
Ashta Bhairava ("Eight Bhairavas") are eight manifestations of the Hindu god Bhairava, a ferocious aspect of the god Shiva. They guard and control the eight directions. Each Bhairava has eight sub Bhairavas under him. All of the Bhairavas are ruled and controlled by Maha Swarna Kala Bhairava, who is considered the supreme ruler of time of the universe and the chief form of Bhairava.

Benefits of Ashta Bhairavar Homam
·           Enhance time management skills
·           Safeguard against accidents and other unforeseen events
·           Infuse positive energy, paving the path to success
·           Improve your financial status
·           Help overcome debts

Performing Swarna Akarshana Bhairava Homam on Kalashtami day brings great prospects for siddhi and plenty of favourable moments in your life. The mantras of the ritual spreads all kinds of positivity i.e. sakala sowbhagya. He can also protect from dangers and evil forces, bestow auspiciousness, peace and happiness.

For More Details Contact:
Sri Danvantri Arogya Peedam,
Anandhalai Madhura, Kilpudupet,
Walajapet-632513, Ranipet Dt.
E-Mail : danvantripeedam@gmail.com
Ph:04172-230033, 230274, 9443330203






Theipirai Ashtami Yagam...

வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சொர்ண பைரவர் யாகத்துடன் சிறப்பு அபிஷேகமும் மாலை 5.00 மணிக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது.
பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்:
வர வேண்டிய பணம் வரவும் தர வேண்டிய பணத்தைத் திருப்பி தரவும் கடன்களை தீர்க்கவும். நோயினால் உண்டாகும் உபாதைகள் தீரவும், வலிகள், வேதனைகள் நீங்கவும். சனிக்கிரகத்தின் தாக்கம் குறையவும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி தோஷங்கள் விலகவும்.உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன், பதவி உயர்வு பெறவும், விவசாயம், வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடவும். அரசியலில் வெற்றிகள் பெறவும். கர்மவினைகள் தீரவும்.குடும்பத்தில் சர்வ மங்களமும் சகல செளபாக்கியங்கள் பெறவும், திருமணம் , குழந்தை பேறு கைக்கூடவும் அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்.
10 பைரவர்கள் அமர்ந்து அருள்பாவிக்கும் ஒரே ஸ்தலம்:
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள் இங்கு ஒரே கல்லில் நான்கு அடி உயரத்தில் நாய் வாகனத்துடன் ஆதார பீடத்தில் 1. அசிதாங்க பைரவர் அன்னம் வாகனத்துடனும் 2. ருரு பைரவர் ரிஷபம் வாகனத்துடனும் 3. சண்ட பைரவர் மயில் வாகனத்துடனும் 4. குரோதன பைரவர் கருடன் வாகனத்துடனும் 5. உன்மத்த பைரவர் குதிரை வாகனத்துடனும் 6. கபால பைரவர் யானை வாகனத்துடனும் 7. பீஷண பைரவர் சிம்மம் வாகனத்துடனும் 8. சம்ஹார பைரவர் நாய் வாகனத்துடனும் என அஷ்ட பைரவர்களுடன் சிரித்த முகத்துடன் அருள்ப்பாவிக்கிறார் மேலும் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் பணம் தரும் பைரவராக இங்கே வீற்றிருந்து அருள்பாவிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் வேறெங்கும் காணாத வகையில் 10 பைரவர்கள் அமர்ந்து அருள்பாவிக்கும் ஒரே ஸ்தலம் என்ற சிறப்பு தன்வந்திரி பீடத்துக்கு உண்டு என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
பைரவரின் சிறப்பு:
பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாவிக்கிறார்.
பயத்தை நீக்கும் பைரவர் அடியார்களின் பாபத்தை நீக்குபவர் ஆவார். இவர் எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடி வருபவர்களுக்கு நன்மை செய்பவர் மேலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்பவர். தகுந்த பூஜைகள் செய்து வந்தால் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலும். சந்தோஷத்துடன் உடனே நன்மை அருள்பவர். நீலநிற மேனியரான பைரவர் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்திய திருக்கரங்களுடன் மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் நிர்வாண கோலத்துடன் காட்சியளித்து நம்மை காத்து வருகிறார் நாய் வாகனத்துடன் காவல் தெய்வமாக காவல் பைரவர் நம்மை காத்து வருகிறார். இவரே அஷ்ட பைரவராகவும் 64 பைரவராகவும் வெவ்வேறு வாகனங்களுடன் அனுக்கிரகம் செய்கிறார் .
தேய்பிறை அஷ்டமி யாகத்தின் சிறப்பு :
ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் ஹோமத்தின் சிறப்பு தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வாரி வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பைரவர் யாகத்தில் பங்கேற்று இவரை வணங்குவது மிகவும் சிறப்பு அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருசேர கிடைக்கும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். மேலும் ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு மேற்கண்ட யாகங்களில் பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Wednesday, April 1, 2020

கிருமி நாசினி தெளித்தல்.


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்கிருமி நாசினி தெளித்தல்.

கொரோணா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், கிருமிகள் பரவாமல் இருக்கவும், மேலும் சுற்றுபுற தூய்மையை கருதியும் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீட வளாகத்தில் 31.03.2020 மாலை 6.00 மணிக்கு இராணிப்பேட்டை தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் வி. ஹரிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறை குழுவினர்களால் கிருமி நாசினி தெளித்தல் நடைபெற்றது.