Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, November 6, 2018

Dhanteras 2018 - Diwali 2018 - Amavasai ....

தன்வந்திரி பீடத்தில்தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுஇலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் சிறப்பு வைபவங்கள்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 06.11.2018 செவ்வாய்கிழமை தீபாவளியை முன்னிட்டு பீடத்தில் பிரதிஷ்  டை செய்துள்ள ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு சிறப்பு அன்னபூரணி ஹோமம், அபிஷேகம் மற்றும் அன்னபடையலும் நடைபெற்றது. மேலும் பீடத்தில் வருகை புரியும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் உடல் பிணி மனப் பிணி நீங்க தீபாவளி லேகிய பிரசாதம் வழங்கலும் நடைபெற்றது. சென்ற 04.11.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தாந்தெராஸ், தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்று வருகின்ற ஸ்ரீ குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி யாகத்தின் மூன்றாவது கால யாகம் நடைபெற்றது. நாளை 07.11.2018 அமாவசையில் மஹா பூர்ணாஹுதியுடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகமும், ராகு-கேது யாகம் மற்றும் காளி யாகம் நடைபெற உள்ளது. தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று 05.11.2018 முதல் இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானவர் பயன்பெற்று வருகின்றனர். இதில் பேங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரி திரு. சிதம்பர குமார் அவர்கள், இரத்தினகிரி கனரா வங்கி மேலாளர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும் பெங்களூர் கனரா வங்கி ஊழியாளர் திருமதி. கற்பகம் அவர்கள் பங்கேற்றனர். இந்த முகாம் நாளை நிறைவு பெறுகிறது.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Sunday, November 4, 2018

Kubera Samrajya Mahalakshmi Yagam


Sri Danvantri Arogya Peedam
 conducting
 Kubera Samrajya Mahalakshmi Yagam
From 05.11.2018 to 07.11.2018.

With the blessings of our guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, We are conducting Kubera Samrajya Mahalakshmi Yagam from 05.11.2018 to 07.11.2018 at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

ABOUT YAGAM :

By devoting yourself to the Kubera Samrajya Mahalakshmi Yagam, you can attain wealth and prosperity. Homam is essentially the worship of Gods and Goddesses through the medium of fire. A powerful and effective practice was taught in ancient eras by the rishis. By performing this homa, experiencing an inner or spiritual transformation becomes possible. This positive experience further helps in blocking negative karmas that quell your fate and success. Conducting an agnihotra will enable swift recovery from debts as it appeases the deities Lakshmi and Kuberar. It assists in breaking different barriers that block your path from achieving success and accumulating wealth.

LORD LAKSHMI KUBERAR :

Lord Kuberar is revered as the Yakshas leader who helps in procuring wealth for the benefit of mankind. He is further renowned as the Lord of riches in Hindu mythology. Also known as Dhanapathi, Kuberar is said to be sage Vishrava’s son. Ancient texts state that Kuberar is the leader of Uttara disa that signifies the direction of North in Sanskrit. Some scriptures denote that he is Ravana, the Lord of Lanka’s brother. Iconography of this deity explains that he carries a bag or pot of gold coins and wears gold jewelry. The Brahma gave Kuberar immortality and made him the God of prosperity and wealth.

Kuberar is also known as the guardian of earths treasures who distributes wealth to deserving people. Goddess Lakshmi is the Hindu deity of prosperity, wealth, wisdom, generosity and fortune. It is believed that Devi Lakshmi protects devotees from financial worries and removes money-associated woes. Worshipping Devi Lakshmi and Kuberar helps in providing material wealth and comforts. The Rigveda mentions the combined power of these deities and leaders of wealth who are also the storehouse of affluence and other riches.

DAYS FOR CONDUCTING THE YAGNA :

Sri Danvantri Arogya Peedam conducting Kubera Samrajya Mahalakshmi Yagam from 05.11.2018 to 07.11.2018.  Festivals associated with Lord Kubera and Goddess Lakshmi include Dhanteras or Dhantrayodashi. Devotees perform that pious yajna on this day. Another religious event is Sharad Purnima where you can offer your prayers for appeasing these deities. Certain other suitable days include Purnima Tithi and Trayodashi.

For More Details, Contact ;
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513,
Vellore District.
Ph : 04172 230033, 9443330203.

Saturday, November 3, 2018

Pavithrotsavam Celebrations .........


Pavithrotsavam Celebrations
November 12th to November 14th, 2018
(Monday to Wednesday)

Pavithrotsavam is a religious ceremony performed annually for purification. As per scriptures that guide the rituals to be performed in the temples, this religious function is performed every year to maintain a very high level of Divine Power for the deities. This religious program is also a “prayaschitta” event to mitigate the effects of any omissions or shortcomings that might have occurred unknowingly during the worship and services performed to the deities during the year.

The three-day religious ceremony consists of Homam, special abhishekam to Lord Danvantri Mula Murthi and Utsava Murthies and other purification rites in preparation of the Pavitra’s, which are sacred threads in the form of garlands that have been specially procured for this occasion.

On Sunday October 28th, these sanctified “Pavitra’s” will adorn the deities during the “Pavitra Samarpana” sacred ceremony thereby creating an atmosphere charged with religious fervor and divine power to the deities. At the conclusion of the religious ceremony, sponsors will receive the pavitra’s that were adorned on deities. Devotees have an excellent opportunity to participate in this religious event and receive divine blessings.

Event Schedule

Monday, 12th November 2018

3.30 PM : Sankalpam, Deeksha Dharanam and Ankurarpanam.

Tuesday, 13th November 2018

8.00 AM : Vedaparayanam
8.30 AM : Sakala Devatha Thirumanjanam
10.30 AM : Lord Danvantri Thayar Special Alangaram, Archanai, Maha Arthi
11.00 AM : Lord Danvantri Utsavamurthi Abhishekam
12.00 Noon Pavithra Homam
4.30 PM : Sahasranama Archanai
5.00 PM : Pavithra Mantapa Alangaram and Sakala Devatha Pooja
6.00 PM : Maha Shanthi Homam

Wednesday, 14th November 2018

6.30 AM : Suprabhatham with Vedaparayanam
8.00 AM : Sakala Devatha Thirumanjanam
8.30 AM : Sakala Devatha Homam
9.00 AM : Pavithra Abhishekam for Lord Danvantri Mula Murthi
11.00 AM : Special Alangaram, Pavithra Samarpana and Sathumurai
11.45 AM : Maha Poornahuthi
4.00 PM : Shanthi Vaibhavam, Deeksha Visarjanam and Asheervachanam

For More Details, Contact ;
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513,
Vellore District.
Ph : 04172 230033, 9443330203.


Pavithrotsavam .........


தன்வந்திரி பீடத்தில்பவித்ரோத்ஸவம்


ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்படவேண்டிய நித்திய நைமித்திக காம்ய, கர்மங்களில் ற்படும் குறைபாடுகள் மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெற பவித்ரோத்ஸவம் என்னும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹோமத்தினால் ஆயுள், ஆரோக்யம், புகழ், ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதுடன் நவக்ரஹ, பூத, ப்ரேத, பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள் அகலும்.  நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் இந்த ஹோமம் செய்யப்பட உள்ளது. இந்த ஹோமத்தின் மூலம் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பாக்கியம் கிடைக்கும் மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கபடும் என்பது திண்ணம்.

இந்த விசேஷமான பவித்ரோத்ஸவம் ஆகமங்களில் விதித்துள்ளபடி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பாலரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேகராமர், ஸ்ரீ சத்தியநாராயணர், ஸ்ரீ கூர்மலக்ஷ்மி  நரசிம்மர், ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்கிரீவர், ஸ்ரீ சஞ்சிவீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர், ஸ்ரீ கருடாழ்வார் போன்ற இதர பரிவார மூர்த்திகளுக்கும்  “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி நாளது விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 26ந்தேதி (12.11.2018) திங்கட்கிழமை மாலை துவங்கி மாதம் 28ம் தேதி (14.11.2018) புதன்கிழமை வரை தினமும் காலை சுமார் 10.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை சுமார் 6.30 மணி முதல் 8.00 மணி வரையும் உபய வேத, கிரந்த பாரயணங்களுடன் பூர்ணாஹூதி, சாற்றுமறை, தீர்த்த ப்ரசாத வினியோகங்களுடன் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.  ஹோமத்திற்கு தேவையான நெய், ஹோமத்ரவ்யங்கள் மற்றும் பவித்திர மாலைகளுக்கு உபயம் ஆளித்து திவ்யானுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி விண்ணப்பிக்கின்றோம்.

இவ்வைபவத்தை முன்னிட்டு நடைபெறும் கோ பூஜை, வேதபாராயணம், விசேஷ திருமஞ்சனம்,  சகல தேவதா ஹோமங்கள், மஹாபூர்ணாஹூதி,  மஹா தீபாராதனை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி உற்சவர் தாயார் ரத புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்த கோடிகள் பங்கு கொண்டு பகவத்கைங்கர்யத்தில்   கலந்துக்கொண்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுக்கிரகத்துடன்  பரிவாரமூர்த்திகளின் அருள்பெறவும் யக்ஞஸ்ரீ ஸ்ரீ டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகள் பெறவும்  அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Navagraha Homam With Kalachakra Pooja

Navagraha Homam With Kalachakra Pooja

At Sri Danvantri Arogya Peedam, Walajapet.
On Sunday 25.11.2018.

With the blessings of our guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, We are conducting “Navagraha Homam with Kalachakra Pooja” on Sunday 25.11.2018 by 10.00 AM to 12.00 PM in our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

‘Nava’ means nine; ‘Graha’ means planets. As per Vedic Astrology, there are 9 planets that influences our lives. The position of a planet at the time of your birth will have an influence on your actions and reactions to different situations in your life. Your life will have its own ups and downs.

Navagraha Homam :

The Navagraha Homam is performed to invoke the blessings of the nine planets who govern your life. The placement of the 9 planets in your birth chart indicates your karma and the level of success or failure you will enjoy in your life. At times, there are chances that one or more particular planets may be afflicted to create stumbling blocks in your life. Performing this Navagraha Homam can offset the negative influences of the afflicted planets. You can enjoy longevity, good health, wealth and happiness by performing the Navagraha Homam to appease the nine planets for obstacle removal.

Benefits of Navagraha Homam with Kalachakra Pooja :

Overcome sufferings, Get rid of obstacles, Encounter success in all endeavors, Benefit from the luck factor, Attain blessings from all 9 planets, Lead a successful life, Conquer depression, Prove your efficacy, Growth in Career, Enjoy marital bliss with your partner, Achieve academic success, Be blessed with longevity and prosperity, Businessmen can enjoy a prosperous phase, etc… After completing the yagna 27 Nakshatra, 9 Navagraha Vriksha Pooja will be performed.
For More Details, Contact ;
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513,
Vellore District.
Ph : 04172 230033, 9443330203.

Navagraha Homam With Kalachakra Pooja


வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்25.11.2018 ஞாயிற்றுக்கிழமை

நவக்கிரக ஹோமத்துடன்காலசக்கர பூஜை


வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நவக்கிரக தோஷங்கள் அகல நவக்கிரக ஹோமத்துடன் காலசக்கர பூஜைநடைபெறுகிறது.

நமது வாழ்வில் 9 கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. வேத ஜோதிடப்படி நவம் என்றால் ஒன்பது என்றும், கிரஹ என்றால் கோள்கள் என்றும் பொருள். ஒருவர் பிறக்கும் பொழுது காணப்படும் கிரக நிலைகள் தான் அவருடைய வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்தம் செயல் மற்றும் விளைவுகளை நிர்ணயிக்கின்றன என்பது ஜோதிட விதியாகும் என்கிறார் யக்ஞஸ்ரீ. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நவகோள்களின் அனுக்கிரகத்தைப் பெற நவக்கிரக ஹோமம் மிகவும் முக்கியமானது. அவரவரின் கர்ம வினையைப் பொறுத்து தான் அவரது ஜாதகத்தில் 9 கிரகங்களின் நிலை காணப்படும். அதன் அடிப்படையில் தான் வெற்றி தோல்வி காணப்படும். சில சமயங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் தோஷம் காரணமாக வாழ்வில் இடையூறுகள் ஏற்படும்.

ஒன்பது கிரகங்களை திருப்தி படுத்தும் விதத்தில் யக்ஞஸ்ரீ. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் தோஷங்கள் குறையும். வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் இடையூறில்லாத வெற்றிகளை பெற முடியும் என்கிறது ஜோதிட சாஸ்த்திரங்கள்.

நவக்கிரக ஹோமம்காலசக்கர பூஜை பலன்கள் :

துன்பங்கள் குறையும். தடைகள் விலகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி. அதிர்ஷ்டங்கள் மற்றும் நன்மைகள் பெறலாம். நவக்கோள்களின் அனுக்கிரகம் கிடைக்கும். வெற்றிகரமான வாழ்க்கை அமையும். மன அழுத்தம் குறையும். செயல்திறன் கூடும். வாழ்க்கையில் வளர்ச்சி. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி. கல்வியில் வெற்றி. நீண்ட ஆயுள். செல்வ செழிப்பு. தொழிலில் முன்னேற்றம். இயற்கை வளம் போன்ற பல்வேறு பலன்களை பெறலாம்.

மேற்கண்ட யாகத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலசக்கரமாக அமைத்துள்ள 27 நக்ஷத்திர, 9 நவக்கிரக விருட்ஷங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Kubera Samrajya Mahalakshmi Yagam

தன்வந்திரி பீடத்தில்

சம்பத்துக்கள் தரும் 

சாம்ராஜ்ய குபேர மஹாலக்ஷ்மி யாகம்.


அதிருத்ர மஹா யாகம், ஆயிரம் சண்டி யாகம், 365 நாட்கள் 365 விதமான யாகங்கள், வருடம் முழுவதும் சண்டி யாகம், கோடி ஜப தன்வந்திரி ஹோமம், கோடி ஜப தனலக்ஷ்மி யாகம் மற்றும் லக்ஷம் நெல்லிக்கனி யாகம், லக்ஷம் தாமரை யாகம், லக்ஷம் மோதக யாகம், லக்ஷம் லட்டு யாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் யாகம், 10 லக்ஷம் ஏலக்காய் யாகம்போன்ற பல்வேறு யாகங்கள் நடைபெற்ற வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இழந்து போன அனைத்து செல்வங்களையும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற வருகிற தீபாவளி, ஐப்பசி அமாவாசை மற்றும் ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு குபேர சாம்ராஜ்ய மஹாக்ஷ்மி ஹோமமும் லக்ஷ்மி குபேரபூஜையும் ஆயிரகணக்கான தாமரை மலர்களை கொண்டு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலயத்தில் இருந்து சோளிங்கர்திருத்தணி செல்லும் மார்கத்தில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 75 சன்னதிகளில் முக்கிய சன்னதியாக ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி போற்றபட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை ன்று குபேர யாகம் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக குபேரன் தான் இழந்த செல்வங்கள், சக்திகளை திரும்ப  பெற்ற ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று நடைபெறும் மகா குபேர யாகம் மிகவும் சிறப்பு பெற்றது ஆகும்.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத அமாவாசை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 07.11.2018 புதன்கிழமை வரை பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி மாபெரும் லக்ஷ்மி குபேர யாகம் நான்கு நாட்கள் ஸ்வாமிகளின் ஜெயந்தி விழாவாக நடைபெற உள்ளது.

இதில் பல்லாயிர கணக்கான தாமரை மலர்களுடன் நெய், தேன், பட்டு வஸ்திரங்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பல்வேறு விதமான பழங்கள், பலவகை புஷ்பங்கள், இருபத்தோரு விதமான அபிஷேகப் பொருட்கள் கொண்டு நடைபெறும் குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி யாகத்திலும், இதர யாகங்களிலும், பூஜைகளிலும், அபிஷேகங்களிலும், சிறப்பு அர்ச்சனையிலும் பக்தர்கள் கலந்து கொண்டு குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி அருளுடன் பொருள் பெற்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர், ஆரோக்யலக்ஷ்மி தாயார், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருடன் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை தரிசித்து  ஆரோக்யத்துடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது.

ஸ்ரீ லட்சுமி குபேரன் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேர பூஜை குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்ததால் நல்லது நடந்தது. சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார்.

மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

குபேரன் ஆட்சி குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். செல்வம் தரும் குபேரன் இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

செல்வம் குவியும் வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி குபேரனை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு ஆண்டு தோறும் அட்சய திதி, தீபாவளி, தை வெள்ளி போன்ற தினங்களில் லட்சுமி குபேர யாகம், மகாலட்சுமி யாகத்துடன் பிரார்த்தனை நடைபெறுகிறது. தற்பொழுது தீபாவளியை முன்னிட்டு வருகிற 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 07.11.2018 புதன்கிழமை வரை, நான்கு நாட்கள் லட்சுமி குபேர யாகமும், சிறப்பு அபிஷேகமும், கனக புஷ்பார்ச்சனையும் காலை, மாலை இருவேளயும் நடைபெறுகிறது.

செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை, பூசம் நக்ஷத்திரம் தரிசனம் செய்து வளம் பெறலாம். மேலும் நோய் நொடிகள் தீரும் இந்த ஆலயத்தில் நோய் நொடி தீர்க்கும் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள் அருளாசியுடன் சொர்ண கணபதி யாகம்,லக்ஷ்மி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், லக்ஷ்மிகுபேர ஹோமம், சுக்கிர கிரஹ ஷாந்தி ஹோமம், அஷ்ட லக்ஷ்மி யாகம், மஹாலக்ஷ்மி யாகம், பஞ்சசூக்த ஹோமம், லக்ஷ்மி வராக ஹோமம், சோடச லக்ஷ்மி யாகம் என பல யாகங்களும், ஹோமங்களும் இதனுடன் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203