Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, February 9, 2014

சமராகு நடப்பவர்களுக்கு சூலினி துர்கா ஹோமம்

வாலாஜாபேட்டை, 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் சூலினி துர்கா ஹோமம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற உள்ளது.

தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல், வீண் அவப்பெயர், செய்யாத தவறுக்கு தண்டனை, தொழில் நிரந்தரம் இல்லாமை, கணவன், மனைவி ஒற்றுமையின்மை, ஒரு குடும்பத்தில் 2, 3, பேருக்கு சமராகு தசை நடப்பது, மனநோய் மற்றும் மன அழுத்தம், ஒருவிதமான பயம், ரத்த சம்பந்தமான நோய்கள், புற்றுநோய்கள், படிப்பில் கவனமின்மை, தேவையற்ற உணர்ச்சிகள், கீழ்தரமான செயல்களில் ஈடுபடுதல் உட்பட ப்ரச்சனைகளில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு சகல செல்வங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும்.

மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இந்த ஹோமம் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறுகிறது.

எனவே பக்தகோடிகள் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீதன்வந்திரி பெருமாளையும், மற்றும் இங்குள்ள 65 பரிவார தெய்வங்களையும், வேறெங்கும் தரிசிக்க இயலாத 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு : குடும்பத்திற்கு ரூ.5000/- அனுப்பி சங்கல்பம் செய்துகொள்ளலாம்.


மேலும் விபரங்களுக்கு : 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுப்பேட்டை, 
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை – 632513. 
வேலூர் மாவட்டம்.
அலைபேசி : 9443330203 | 9444812190

அக்னி ஹோமங்கள் அல்லலைத் தீர்க்குமா? பாகம் 58 - நன்றி பாலஜோதிடம்



Thursday, February 6, 2014

மகா காளி யாகத்திற்கான பட்சனங்கள்...

தன்வந்திரி பீடத்தில் 7.2.2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற இருக்கிற மகா காளி யாகத்திற்கான பட்சனங்களின் காட்சிகள்...





Sunday, February 2, 2014

Sapthagiri Amma visits Danvantri Peedam

The Peetadhipathi of Prathyankara Peedam, Sapthagiri Amma, visited Sri Danvantri Arogya Peedam, Walajapet, on January 28, 2014. He was received with traditional honour including Poornakumbha honour by Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal and members of his family.

Sapthagiri Amma went round the Peedam and offered worship before the 69 idols at the Peedam including Moolavar Sri Danvantri.

He also had a look at the spot where the Prathaynakara homam was conducted with 6,000 red chillies at the yaagakundam next to the Peedam complex. He was also informed by Sri Muralidhara Swamigal that the yaagakundam spot would be developed as a Maha Peedam where a 27-foot Aishwarya Prathyankara Devi idol would be installed.

He received the blessings of Sri Muralidhara Swamigal.

Saturday, February 1, 2014

தன்வந்திரி பீடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உலக நலன் கருதி சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்…

வாலாஜாபேட்டை பிப்ரவரி 01.02.2014 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் மாணவ, மாணவியரின் நலன் கருதியும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன் கருதியும், மாணவ, மாணவியரின் ஞாபகத்திறன் மேப்படவும், வருகிற தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறவும் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர், சரஸ்வதி மற்றும் 468 சித்தர்கள் சிவலிங்கமாக அமைக்கப்பட்ட இடத்தில் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற தன்வந்திரி மற்றும் சகல தேவதா ஹோமத்தில் பங்கேற்றனர். இந்த ப்ரார்த்தனையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. M.சத்யநாராயணன் அவர்களின் துணைவியார் திருமதி. V.அம்பிகா சத்யநாராயணன் அவர்கள் உடனிருந்தார். பின்னர் சிறப்பு அன்னதானங்களும் நடைபெற்றன.



சனிசாந்தி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…

வாலாஜாபேட்டை பிப்ரவரி 01, 2014, தன்வந்திரி பீடத்தில் மாதம் தோறும் முதல் சனிக்கிழமை அன்று நடைபெறக்கூடிய சனிசாந்தி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. தங்களது சகல தோஷங்களும் நீங்கவேண்டும் என்று இந்த ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். மேலும் திருநெல்வேலியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின்னர் பக்தர்கள் பீடத்தில் அமைந்துள்ள 69 பரிவார தெய்வங்களையும், தன்வந்திரி பகவானையும் சுற்றி சேவித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியை பெற்று மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.



பூமி பூஜை அழைப்பிதழ்...