Pages - Menu

Thursday, March 19, 2015

தன்வந்திரி பீடத்தில் நாளை நிகும்பலா யாகம்

தன்வந்திரி பீடத்தில் உள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவி சன்னதியில் நாளை அமாவாசை முன்னிட்டு நடத்தப்படும், எதிரிகளை அழிக்கக்கூடிய, "நிகும்பலா' ஹோமம் மிகவும் புகழ் பெற்றது என்பது புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
தன்வந்திரி பீடத்தில் பலவகையான தெய்வங்களுக்கு பலவகையான சன்னதிகள் அமைத்து ஒவ்வொரு தெய்வங்களுக்கும்  ஒவ்வொரு விதமான ஹோமங்கள்  பரிகாரமாக நடைபெற்று வருகின்றது. உதாரணமாக திருமண தடை நீங்கும் வகையில் பரிகாரம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வகையில் பரிகாரம், படிப்பு நன்றாக வர வேண்டும் என்ற பரிகாரம், என பல ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. நாளை 20.03.2015 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் எதிரிகளை அழிக்கக்கூடிய வகையில், நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு முதல் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பலருடைய உதவியுடன் இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, வர மிளகாய் மூலம், "நிகும்பலா' ஹோமம் நடத்தப்படுவது மிகவும் விசேஷமானது. எதிரிகளை அழிக்கக்கூடிய வகையில், "நிகும்பலா' ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தின் மூலம், 64 வகையான சாபங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பல்வேறு கிரஹங்களால் வரக்கூடிய தடைகளும் நீங்கி விடும். "நிகும்பலா' ஹோமம் நடத்துவோருக்கு ராகு, கேது தோஷம், அகால மரணம், கண்டம் நிவர்த்தி தோஷம் போன்றவை நீங்கி விடும்.கடந்த, 2014ல் உலக நன்மை ஏற்படவும், இயற்கை வளம் செழிக்கவும், அமாவாசை தினத்தன்று நடந்த, "நிகும்பலா' ஹோமத்தில், 6000 கிலோ வர மிளகாய்வத்தல் ஹோமத்தில் பயன்படுத்தப்பட்டது. வர மிளகாய் வைத்து ஹோமம் நடத்தப்படும் போது, கண்களில் கண்ணீர் வராது. அமாவாசை தினத்தன்று நடத்தப்படும், "நிகும்பலா' ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர், எத்தனை கிலோ வேண்டுமானாலும் வர மிளகாய் ஹோமத்திற்கு தேவையான திரவியங்கள் தன்வந்திரி பீடத்தில் பெற்று யாகத்திற்கு கொடுத்து உதவலாம்.

இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment