Pages - Menu

Wednesday, March 21, 2018

ஏகாதசி - நெல்லிபொடி அபிஷேகம்........


உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல்,  உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள்,  குடல் வாயுவை, எலும்புருக்கி நோய் நீங்கி ஆயுள் பலம் கூட,

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
27.03.2018 ஏகாதசி திதியில் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெறுகிறது.


ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம் :

நோயில்லாத வாழ்வுக்காக நாம் வழிபட வேண்டிய விசேஷ தெய்வம் ஸ்ரீ தன்வந்திரி பகவான். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரம். தேவர்களுக்குப பூரண வாழ்வை வழங்குவதற்காகத் திருப்பாற்கடல் கடையப்பட்டது அபோது கடலில் இருந்து காமதேனு, ஐராவதம், கௌஸ்துப மணி, மகாலஷ்மி போன்ற மங்கலமான அம்சங்களுடன் தன்வந்திரி பகவானும் அவதரித்தார் என்று புராணங்கள் கூறும். இவர் தன திருக்கரத்தில் வைத்திருக்கும் கலசத்தில் இருந்து வழங்கிய அமிர்தத்தை உண்டதனால்தான் தேவர்கள் பூரண ஆயுளைப் பெற்றார்கள். எனவே தன்வந்திரி பகவானை மருத்துவத் துறையின் பிதாமகன் என்பர்.

எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு அவரது பிராச்சத்த்தைப் பெற்று உண்டால் நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. அவருக்கு அபிஷேகம் செய்து அந்தத் தீரித்தத்தை உட்கொள்ளலாம். பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான், இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி பலரையும் அடைய வேண்டுமென முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேத்த்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. தன்வந்திரி பெருமாளை திருவோணம், ஹஸ்தம், சுவாதி புனர்பூசம் நக்ஷத்திரம், ஏகாதசி திதி,. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தார் என்கிறது மத்ஸ்ய புராணம். இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருந்துவர் இன்றும் குறிப்பிடுகிறது.இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி செவ்வரியோடிய கண்கள் வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து பரந்த மார்பு பட்டுப் பீதாம்பரம் மலர்மாலைகள் தரித்த ஆபரணத் திருமேனி நான்கு திருக்கரங்கள் மேல் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து காணப்படுவார். கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டைப் பூச்சியையும் மற்றொன்றில் அம்ருத கலசத்தையும் தாங்கிக் காணப்படுவார்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள பகவான் அட்டைப் பூச்சிக்கு பதிலாகசீந்தில்என்ற மூலிகைக் கோடியை ஏந்தியபடி காணப்படுகிறார்.துளசி ஆலிலை அரசு இலை வில்வம் விஷ்ணு கிராந்தி நாயுருவி மருக்கொழுந்து பூர்ஜ இலை தேவ தாரு இலை போன்ற இலைகளும் செவ்வந்தி சண்பகம் பிச்சி பாரிஜாதம் தாமரை அரளி புன்னைப்பூ மந்தாரை போன்ற பூக்களும் இவரது பூஜைக்கு உரியவை மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான கோதுமை அல்வா அல்லது சுக்குவெல்லம் செய்து தன்வந்திரிக்கு நைவேதிப்பது சிறந்தது!

இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில். அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் தன்வந்திரி பகவான். ஒன்றென  ஒருவராக உள் வந்து அமர்ந்தார். இன்று ஓங்கி உயர்ந்த ஒரு பீடத்தையே தனக்கென ஸ்தாபித்துக் கொண்டு விட்டார். தேசமெங்கும் இவருக்கும் பக்தகோடிகள். உலகெங்கிலும் இருந்து இவரை தரிசிக்க அன்பர்கள் தேடி வருகிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் வருகிற 27.03.2018 செவ்வாய் கிழமையில் பங்குனி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஆயுள் தோஷம் நீங்கும் ஔஷத பிரசாதம் :
நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெளிளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,

No comments:

Post a Comment