Pages - Menu

Tuesday, January 2, 2018

தன்வந்திரி பீடத்தில்
ஆருத்ராவை முன்னிட்டு
சிறப்பு யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு 

டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஆருத்ராவை 

முன்னிட்டு இன்று 02.01.2018 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 

சிறப்பு ஹோமமும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து நாளை காலை 10.00 மணியளவில் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபல யாகம் ஆகிய மூன்று யகங்கள் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment