வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி மற்றும் ப்ரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நலமுடன் வாழ
சிறப்பு அபிஷேகத்துடன் மாபெரும் அமாவாசை யாகம் காலை 10.00 மணிக்கு துவங்கி பகல் 1.00
மணி வரை நடைபெற்றது. அமாவாசையில்
இவளுக்கு பிடித்தமான சிவப்பு மிளகாய், உப்பு, மிளகு மேலும் 108 வகை ஹோம திரவியங்கள்,குண்டத்தில்
இடப்பட்டு மேலும் பட்டு புடவை, பழவகைகள், வேப்பிலை,நெய்,நெய்யில் செய்த இனிப்பு
பட்சணங்களையும் யாக குண்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம்,ஏவல்,துர் தேவதைகள் மற்றும் துஷ்டர்களையும் அழித்து தன் பக்தர்களை காப்பாற்றி, நல்ல பலவிதமான
செல்வங்களையும்,மக்கட் செல்வத்தையும்,
மன நிம்மதியும், குடும்ப ஒற்றுமையும், ஆரோக்கத்தையும்
கொடுப்பாள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள்பக்தியுடன்
ப்ரார்த்தனை செய்தனர் பங்கு பெற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசி வழங்கினார்..பின்னர்
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது என்ற தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:
Post a Comment