Pages - Menu

Sunday, May 1, 2016

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்,இன்று(1.05.2016)ஞாயிறு காலை 10 மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்கு தேன் அபிஷேகம்,நடைபெற்றது.




வேலூர் மாவட்டம்வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக தொழிலாளர்களின் உடல் நலம்மன நலம் கருதியும்அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டியும் நாளை (1.05.2016ஞாயிறு காலை 10.00மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்குதேன் அபிஷேகம்தன்வந்திரி யாகமும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது..
தொழிலாளர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு தன்வந்திரி யாகத்தை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தினார். .
இந்த யாகத்தின் போது உலக தொழிலாளர்களின் நலன்கருதி தன்வந்திரி குடும்பத்தினரும்பீடத்திற்கு வருகை புரிந்த பக்தர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்,இதில் சென்னை ஸ்வஸ்திக் டி.வி.டாட்காம் நிறுவனர் விஜய் விஸ்வநாத்மற்றும் சென்னை ஸ்ரீ விக்நேஸ்வரா கல்சுரல் அகாடமி செயலர் ஆர்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.வருகை புரிந்த பக்தர்கள் தன்வந்திரி மூலவருக்கு தேன் அபிஷேகம் செய்து நலமுடன் வாழ ப்ரார்த்தனை செய்து கொண்டனர். 
மேலும் விவரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்புதுப்பேட்டைஅனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை. 632513

No comments:

Post a Comment