Pages - Menu

Sunday, October 4, 2015

தன்வந்திரி பீடத்தில் 1,25,000 ஜபத்துடன் மகா காளி யாகம்

தன்வந்திரி பீடத்தில் 1,25,000 ஜபத்துடன் மகா காளி யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 10ம் தேதி புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு மாலை 5.00 மணிமுதல் 12ம் தேதி பகல் 2.00 மணி வரை 1,25,000 ஜபத்துடன் மகா காளி யாகம் நடைபெற நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தில் செவ்வரளி பூ,  தாமரை பூ, நாயுருவி, வெண்கடுகு, கடுகு, மிளகு போன்ற விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் பூசணிக்காய், மாதுளம் பழம், இலுப்பை எண்ணெய், முந்திரி, பேரீச்சை போன்ற பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் காளிக்கே உரிய பொருட்களை கொண்டு இந்த ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த

ஹோமத்தில்கலந்துகொள்வதினால துஷ்ட சக்திகள் அகலவும்,கலைத்துறையில் சிறந்து விளங்கவும்கடன் தொல்லைகள் நீங்கவும்,வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும்தடைப்பட்டதிருமணம் நடைபெறவும்குழந்தை பாக்கியம் பெறவும்கல்வியில்மேன்மை அடையவும்சொந்த வீடூவாசல்நன்மக்கள் அமையவும்இந்த மாபெரும் மகா காளி யாகத்தை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தஉள்ளார்கள்.

மேலும் இந்த யாகமானது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் திரு.யுவராஜ் அவர்கள் உதவியுடன் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு காளி தேவியின் அருளை பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
 தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

No comments:

Post a Comment