Pages - Menu

Sunday, February 15, 2015

15.02.2015 இன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கந்தர்வ ராஜ ஹோமமும், சுமங்கலி பூஜையும் நடைபெற்றது.





இன்று ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல கிரஹ தோஷங்களும் நீங்கி, ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற மகா கந்தர்வ ராஜ ஹோமம் மிக விமர்சையாக நடைப்பெற்றது, இந்த  ஹோமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர், இதில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.

இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இந்த சுமங்கலி பூஜையில் சென்னையைச் சேர்ந்த திரு.பிரசன்னா-மாலு குடும்பத்தினர் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர். இதில் ஏரளாமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

No comments:

Post a Comment