Pages - Menu

Sunday, February 8, 2015

08.02.2015 இன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

   
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இந்த சுமங்கலி பூஜையில் பெங்களூரைச் சேர்ந்த திரு.சங்கமேஸ்வரன்-காயத்ரி குடும்பத்தினர் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர். இதில் ஏரளாமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment