Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, February 9, 2014

சமராகு நடப்பவர்களுக்கு சூலினி துர்கா ஹோமம்

வாலாஜாபேட்டை, 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் சூலினி துர்கா ஹோமம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற உள்ளது.

தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல், வீண் அவப்பெயர், செய்யாத தவறுக்கு தண்டனை, தொழில் நிரந்தரம் இல்லாமை, கணவன், மனைவி ஒற்றுமையின்மை, ஒரு குடும்பத்தில் 2, 3, பேருக்கு சமராகு தசை நடப்பது, மனநோய் மற்றும் மன அழுத்தம், ஒருவிதமான பயம், ரத்த சம்பந்தமான நோய்கள், புற்றுநோய்கள், படிப்பில் கவனமின்மை, தேவையற்ற உணர்ச்சிகள், கீழ்தரமான செயல்களில் ஈடுபடுதல் உட்பட ப்ரச்சனைகளில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு சகல செல்வங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும்.

மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இந்த ஹோமம் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறுகிறது.

எனவே பக்தகோடிகள் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீதன்வந்திரி பெருமாளையும், மற்றும் இங்குள்ள 65 பரிவார தெய்வங்களையும், வேறெங்கும் தரிசிக்க இயலாத 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு : குடும்பத்திற்கு ரூ.5000/- அனுப்பி சங்கல்பம் செய்துகொள்ளலாம்.


மேலும் விபரங்களுக்கு : 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுப்பேட்டை, 
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை – 632513. 
வேலூர் மாவட்டம்.
அலைபேசி : 9443330203 | 9444812190

No comments:

Post a Comment